Header Ads



நாட்டுக்கு சாபமாக மாறியுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நாட்டுக்கு சாபமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டுக்கு சாபம் எனக் கூறினாலும் 19வது திருத்தச்சட்டம் நாட்டுக்கு சாபமல்ல, ஜனாதிபதியே நாட்டுக்கு சாபமாக மாறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பொறுபேற்றதன் பின்னரே ஜனாதிபதி தவறியது.

கட்சியின் தலைவர் பதவியை பொறுபேற்ற பின்னர், கட்சியினர் சொல்வதை கேட்க வேண்டும்.

ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருந்திருந்தால், பிரதமருடன் இணைந்து சிறப்பாக வேலை செய்திருக்க முடியும் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. JANAZIPAZI ORU SHAFAMA.
    IZUZAN YAHAPALANAYA.
    IZUHUM ORU SHAFAMTHAN.

    ReplyDelete

Powered by Blogger.