Header Ads



தமிழர்கள், சிங்களவர்களிலும் தீவிரவாதிகள் இருந்தனர் - ரணில்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும் என்றும், அது மேலும் பரவுவதற்கு இடமளிப்பது சிறந்ததல்ல என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

லக்கலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு இடையிலும், சிங்களவர்களுக்கு இடையிலும் தீவிரவாதிகள் இருந்தனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது.

எவ்வாறிருப்பினும், இனவாத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடிப்படைவாதம் மற்றும் இனவாதம் என்பன பௌத்த தர்மத்திற்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. திவிரவாதம் பற்றி இப்போது சரியாக பிரதமர் உன்மையை சொன்னார்.

    ReplyDelete
  2. Sorry to say so called fundamentalism and extremism are having present Buddhism whereas it has no such goals as other religions do.

    ReplyDelete

Powered by Blogger.