Header Ads



கல்முனை வடக்கு பிரதேச, செயலகம் விரைவில் தரமுயர்த்தப்படும் - ரணில் இன்றும் வாக்குறுதி


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம்  வாக்குறுதியளித்துள்ளார்.  

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை விரைவில் பூர்த்தி செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்து. இச்சந்திப்பில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபயவர்த்தனவும் கலந்துகொண்டிருந்ததுடன், கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கவீந்திரன் கோடீஸ்வரன், ஸ்ரீநேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினை குறித்தும் அதனை அடிப்படியாக வைத்து தற்போது முன்னெடுத்து வருகின்ற ஆர்பாட்டங்கள் உண்ணாவிரத போராட்டங்கள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொட்ர்பில் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி பிரதமருடன் தாம் பேச்சுவார்த்தையும் , ஜுன் 30ஆம் திகதிக்குள் இதற்கு தீர்வை வழங்குவதாக உறுதியளித்திருந்தபோதும் ஏப்ரல் 21 தாக்குதல்களால் அதற்கான நடவடிக்கைகள் காலதாமதடைந்திருந்ததை பிரதமருக்கு நினைவுபடுத்தினர். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பது என ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே இணக்கம் காணப்பட்டது. இதற்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கும் நாம் ஏற்கனவே இணங்கியிருந்தோம் என்பதையும் கூறினார். 

2 comments:

  1. ஹக்கிம் ஏற்கெனவே ஏற்று கொண்ட விடயம்,ஹரீஸ் க்கு தெரியாமலா இவ்வளவு காலமும் இருந்தார்.

    ReplyDelete
  2. இது மட்டும் நிகழ்ந்தால் முஸ்லிம் அரசியல்வாதிகள் உங்களுடைய அரசியல் வாழ்க்கையின் முடிவை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.