Header Ads



பாராளுமன்றத தெரிவுக்குழுவின் அழைப்பை, நிராகரித்த தயாசிறி - சிக்கலில் மாட்டுவாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அடுத்ததாக, தயாசிறி ஜயசேகரவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, அதற்கான அழைப்பும் தெரிவுக்குழுவினால் விடுக்கப்பட்டது.

தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி, நேற்றைய அமர்வின் போது, தயாசிறி ஜயசேகரவை சாட்சியமளிக்க அழைத்தார். எனினும் அவர் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை.

இதையடுத்து அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

அதேவேளை, தாம் தெரிவுக்குழு முன்பாக தோன்றி சாட்சியமளிக்கப் போவதில்லை என்று தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தெரிவுக்குழுவின் அழைப்புக்கு தயாசிறி ஜயசேகர இணங்கவில்லையெனில், அவருக்கு எதிராக தெரிவுக்குழுவினால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

8 comments:

  1. Good
    இந்த தெரிவிக்குழு விசாரணை குற்றவாளிகளை தப்பிக்கவிடுவதற்கான ஒரு நாடகம்

    ReplyDelete
  2. Should arrest ajan for abuse parliament high comity

    ReplyDelete
  3. விடுங்க ரிஷாட் தெருவில குரைக்கிற நாயெல்லாம் அரஸ்ட் பண்ணி பெரியாளாக்கவேண்டாம் இதெல்லாம் எலும்புத் துண்டுக்கு வாலாட்டுறதுகள்...

    ReplyDelete
  4. some people can file a case against this guy Ajan because he always spread hatred speech among different communities. Now he is opposing the parliament select committee so it is serious issue. some body can take his comments against parliament select committee to the court immediately.

    ReplyDelete
  5. some people can file a case against this guy Ajan because he always spread hatred speech among different communities. Now he is opposing the parliament select committee so it is serious issue. some body can take his comments against parliament select committee to the court immediately.

    ReplyDelete
  6. விடுங்க ரிஷாட் தெருவில் குரைக்கிற நாயெல்லாம் அரெஸ்ட் பண்ணி பெரியாளாக வேண்டும் இதெல்லாம் எலும்பு துண்டுக்கு வாலாட்டுறதுகள்...

    ReplyDelete
  7. அப்படியே ஆகட்டும்

    ReplyDelete
  8. டேய் அஜன் மச்சான் உன்னை arrest பயறதுக்கு பல முயற்சிகள் நடக்குது. எங்கட தகவல்கள் யாருக்கும் தெரியாது. கள்ளப் பெயரில்தானே எழுதுறோம்னு செனச்சிக் கொள்ளக் கூடாது. கவனம் mobile Number இல்லாம இப்ப எல்லாம் net use பண்ண முடியாதுடா என்ட ராசா. கவனம்டா. புடிச்சுக் கொடுத்தாலும் புடிச்சுக் கொடுத்துடுவானுகள்.

    ReplyDelete

Powered by Blogger.