Header Ads



காத்தான்குடியில் அரபு எழுத்து, பெயர் பலகைகளை அகற்ற தீர்மானம்


கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரியின் உடலை காத்தான்குடியில் அடக்கம் செய்யக்கூடாது என காத்தான்குடி நகரசபை நேற்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்திருந்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் என்ற தற்கொலைதாரியே இந்த தாக்குதலை நடத்தியிருந்தார்.

அவரது தலை மற்றும் சிதைந்த உடல்பாகங்களை, தாயார் அடையாளம் காட்டியுள்ளார்.

டி.என்.ஏ பரிசோதனையிலும் மீட்கப்பட்ட பாகங்கள் ஆசாத்தினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மட்டக்களப்பு விமானநிலையத்திற்கு அண்மையாக உள்ள புதுநகர் பகுதியிலுள்ள ஆலையடி மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது.

இதையறிந்த பிரதேசவாசிகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காத்தான்குடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்த நிலையிலேயே, காத்தான்குடி நகரசபை நேற்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அரபு எழுத்து பெயர் பலகைகளை அகற்றி, புதிய பெயர்ப்பலகைகளை பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதியை தருமாறு உள்ளூராட்சி அமைச்சை நகரசபை கோரியுள்ளது.

7 comments:

  1. தயவு செய்து தமிழையும் தவிர்த்து சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்துங்கள். தமிழ் இனவாதிகளுக்கு ஒரு பாடத்தை கற்று கொடுப்போம்

    ReplyDelete
  2. Thamil eluththukkalum ahatra padanum. Muslimgalukku Thamil theweyillay

    ReplyDelete
  3. @NGK, Good idea
    நீங்களும் சிங்களம்/ஆங்கிலத்தில் comments எழுதலாமே.

    ReplyDelete
  4. Remove also TAMIL AND SINHALA KEEP English.

    ReplyDelete
  5. Remove also TAMIL, SINHALA and English. and write it in Paali Language if you can... You Jealous Racist people..

    ReplyDelete
  6. @NGK,
    அடேய் நாங்க பாடம் கற்று பல வருடங்கள் கடந்து விட்டது. இனி உங்களுக்கான பாடம் தான்.

    ReplyDelete
  7. NGK.நாங்களும் நீங்களும் தமிழில் தான்பேசுறம் பின் ஏன்??

    ReplyDelete

Powered by Blogger.