Header Ads



சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவது, பௌத்த மதத்திற்கு எதிரானது - ரணில்

சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவது பௌத்த மதத்திற்கு எதிரானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

லக்கல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளல் அல்லது வேறும் ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தல் பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது.

கடும்போக்குவாதம் அல்லது இனவாதம் என்பனவற்றை எந்தவொரு காலத்திலும் பௌத்த மதம் அனுமதிக்கப் போவதில்லை.

தனது மொழி, இனம் மற்றும் சமயம் தொடர்பில் பெருமிதம் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு.

அதேபோன்று நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அப்படி என்றால்.....
    அதன மெதன ரதன தேர என்ன மதம்

    ReplyDelete
  2. Rightly said Hon. Prime Minister. Very regret to point out no politician take steps since Independence for the above view. Even earlier Prime Ministers SWRD, JR and many others are examples.

    ReplyDelete

Powered by Blogger.