Header Ads



முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்கர்களின் அழைப்பு, அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடி

அமைச்சு பதிவிகளை ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடியாகவும் மத நல்லிணக்கத்துக்கு பலமாகவும் அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தற்போது சிலர்  பௌத்த மதம் அழிந்து வருவதாக சமூகத்தில்  பொய்யான நிலைப்பாட்டை உருவாக்க முயற்ச்சிக்கின்றனர். பல நூற்றாண்டுகள்  ஐரோப்பியரின் ஆதிக்கம் நாட்டில் காணப்பட்ட போது அழியாத பௌத்த மதத்தை தற்போது  அழிக்க முடியாது.  

சிலர் தமது சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறான கருத்துக்களை மக்கள் மத்தியில் தோற்றுவித்து பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

புஸ்ஸலாவை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.