Header Ads



தாங்க முடியா மனவலியை சுமக்கிறோம், சகோதரனே உன் மாறுதலால்...



நட்பாய் கோர்த்திட்ட கரங்களில்
ஆயுதங்கள் ஏனோ??

இனிமையாய் பேசிட்ட நாவில்
வசைகள் ஏனோ??

கனிவாய் ஒளி வீசிய விழிகளில்
இன்று வன்மம் தான் ஏனோ??

தாங்க முடியா மனவலியை சுமக்கிறோம்
சகோதரனே உன் மாறுதலால்...

ஆனாலும் என்றும் உனக்காய் எம்முள் உள்ள 
நேசம் மாறிடாது..

இனம் என்ற ஒன்றால் நாம் வேறுபட்டிட முடியாது,
எத்தனை முறை எம் பேனாக்கள் வடித்திருக்கும் இவ்வரிகளை..

ஆனால் இன்று அதே இனம் என்ற ஒன்றால் எம் பேனாக்களுடன் சேர்த்து விழிகளும் வடித்திடுதே உதிரத்தை...

மழை உனக்கும் எனக்கும் வேறல்ல..

வானும் உனக்கும் எனக்கும் வேறல்ல..

அந்த நிலவும் கூட உனக்கும் எனக்கும் வேறல்ல..

ஆனால் மனம் மட்டும் உனக்கும் எனக்கும் வேறுபட்டிடலாமோ??

அன்று ஆசையாய் நட்புடன் எம்மை அரவணைத்திட்டதும் உன் கரங்கள் தான்..

இன்று வெறுப்பாய் எம்மை ஒதுக்கிடுவதும் உன் அதே கரங்கள் தானே..

மீண்டும் ஒரு முறை நிலத்தில் குருதி தேங்கி வரலாறு பேசிட வேண்டாம்...

மீண்டும் ஓர் முறை கறுப்பு நாட்களுக்குள் பயணித்திட வேண்டாம்..

மீண்டும் ஒரு முறை வெண்மேகங்கள் கரிய 
புகைகளால் மாசுபட்டிட வேண்டாம்..

நாம் உன்னிடம் கேட்பதெல்லாம்..

அரவணைக்க மட்டுமே அறிந்த உன் 
கரங்களையன்றி கல் வீசிடும் உன் கைகளை அல்ல...

இனிமையை மட்டுமே அறிந்த உன் மொழிகளையன்றி இனவாதத்தை பேசிடும் உன் 
பேச்சுக்களை அல்ல..

கனிவை மட்டுமே சுமந்திருக்கும் 
உன் விழிகளையன்றி வெறுப்பை உமிழ்ந்திடும்
பார்வைகளையும் அல்ல..

காத்திருக்கிறோம் மீண்டும் உன்
வருகையை எதிர்பார்த்தே...


இப்படிக்கு 
 என் பேனா✒

2 comments:

Powered by Blogger.