Header Ads



கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும்வரை உண்ணாவிரதம்


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று இன்று -17- காலை 10.30 மணிமுதல் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது. 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதனுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த உண்ணாவிரப்போராட்டத்தில் இவர்களுடன் பிரதேச சமூக அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். 

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர். 

மேலும் இந்த நல்லாட்சி ஆரம்பித்த நாள் முதல் எங்களுக்கான இந்த விடயம் பாராமுகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே. 

பிரதமரும், ஜனாதிபதியும் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார்கள். எங்களுடைய இந்த தேவையை அறிந்து போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனயும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரனையும் அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். 

நாங்கள் இங்கு இனவாத, பிரதேசவாத அலையை தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்க வரவில்லை. எங்களுடைய போராட்டம் இந்த செயலகத்தை தரமுயர்த்தும் வரை தொடரும். நாங்கள் உணவருந்தாமல்,நீர் கூட அருந்தாமல் எங்கள் உரிமைக்கால போராட்ட இங்கு வந்திருக்கிறோம் என்றனர். 



4 comments:

  1. Nallaaa kanduttaanuhal.. unnaaviratham irukretha

    ReplyDelete
  2. கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்துதலும் மூதூர் தமிழ் பிரதேச செயலாளர் பிரிப்பும் தமிழ் முஸ்லிம் உறவின் கொதிநிலை சிக்கல் என்பதை ஏற்கனவே குறிபிட்டுள்ளேன். இப்பிரச்சினையை சம்பந்தருடனும் உள்ளூர்த் தலைவர்களோடும் பேசி தீர்க்கும்படி முஸ்லிம் தலைவர்களை கேட்டிருக்கிறேன், எல்லோருமே மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார் எனவே கூறினர்.இப்பிரச்சினையி இழுத்தடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகிறதை சுட்டிக்காட்டி எல்லைகள் தொடர்பாக பிரச்சினை யிருந்தால் இப்பவே பேசி தீர்மானிக்கும்படி கேட்டிருந்தேன், நியாயமான எல்லைகள் மீழமைவு கோரபட்டால் அதுபற்றி ஒத்துழைக்கும்படி தமிழர்களைக் கேட்டுக்கொண்டேன். அன்புக்குரிய ஹாரிஸ் அவர்கள் நிலமை புரிந்துகொண்டு உள்ளூர்த் தமிழர்களுடனி. இறுதிச் சுற்று பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.