Header Ads



எப்படா இந்த, சோனிகளை ஒரு கை பார்க்கலாம்...? (கொப்பளிக்கும் இனவாதத் தீ)

எப்படா இந்த சோனிகளை ஒரு கைபார்க்கலாம்?? என இலவு காத்த கிளிபோல இருந்த இனவாதிகளுக்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது.

இத்தனைக்கும் இந்த சோனிகள் செய்த தவறு ஏதும் இல்லை. தீவிரவாதத்துக்கும் சோனிகளுக்கும் முடிச்சுப்போட்டு முதுகெலும்பை முறிக்கிறார்கள். இருப்பினும் பொறுமையே எங்கள் ஆயுதமாகிப்போனது.

பாராளுமன்றத்திலே இனவாதிகளால் மூட்டை மூட்டையாய் அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளை நினைக்கையிலே நெஞ்சம் கனக்கிறது.

அடாத்தாக ஆயுத முனையிலே 1989 பிடித்துக்கொண்ட கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில், அதை தரமுயர்த்தவிடாமல் பள்ளியிலே கூடி தடுத்தது இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்று நாகூசாமல் பொய்யுரைக்கின்றான் கொந்தராத்துக் கேடி கோடீஸ்வரன்.

அதனை தரமுயர்த்தாது “தீவிரவாதிகள் துண்டுப்பிரசுரம் அடித்து தடுத்தார்கள்” என்று பிரேரிக்கின்றான் சனிக்குப் பிந்திய வியாழேந்திரன்.

இவை அத்தனையும் உண்மை என ஆமோதிக்கின்றான் கோரமுகன் விமல் வீரவன்ஸ. வாய்த்துவிட்டதனால் அப்துல்லா மஹ்ரூபை சஹ்ரானின் சாச்சா என்கின்றான். இத்தனைக்கும் ”இலங்கை பாராளுமன்றத்துக்குள்ளேயே குண்டு வைத்தது விமல் வீரவன்ஸவின் மைத்துணர்தான்” #மங்களசமரவீர.

சோனிகள் தமிழ் இனத்தின் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியதில்லை. அவர்கள் தாய்நாட்டுக்கு என்றுமே விசுவாசமாக இருந்தார்களே ஒழிய காட்டிக் கொடுக்கும் கைங்கரியம் செய்யவில்லை.

”தமிழீழம் தந்தை செல்வா பெற்றுத்தராது போனால் தம்பி அஷ்ரப் பெற்றுத்தருவேன் என்று முழங்கிய சோனியின் பண்பெங்கே! “தருணத்துக்கு கூட்டிக் கொடுக்கும் கோடீஸ்வரன் , வியாழேந்திரன் போன்றோரின் பண்பெங்கே!

பாட வாய்த்தால் பல்லுப்போன கிழவியும் பாடுவாள் என்பதனை பாராளுமன்றில் இவர்களின் உரைகள் உணர்த்துகிறது.

கிழக்குத் தமிழ் மக்களுக்கு இவ்வாறான தீராத இனவாத புற்றுநோய் சிந்தனை கொண்ட வியாழேந்திரனும் கோடீஸ்வரனும் மக்கள் பிரதிநிதிகளாக கிடைத்திருப்பது சாபமே!

ஷிபான் BM

No comments

Powered by Blogger.