தென்கிழக்குப் பல்கலைக்கழகதில் இன நல்லுறைவை மேம்படுத்தும் நோன்புப்பெருநாள் விருந்துபசார நிகழ்வு
(எம்.என்.எம்.அப்ராஸ்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக வேலைச்சூழலில் இன நல்லுறைவை மேம்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தொகுதியில் கடமையாற்றும் கல்விசார உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்கலைக்கழத்தில் கடமையாற்றும் சகோதர இனத்தை சேர்ந்த சக உத்தியோகத்தர்களுக்கான நோன்புப்பெருநாள் விருந்துபசார நிகழ்வு இன்று (11) பல்கலைக்கழக நிருவாக கட்டிடத்தொகுதியின் கூட்ட அறையில் விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் மேலும் அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பல்கலைகழகத்தின் பேரவை உறுப்பினர் சங்கைக்குரிய பேராசிரியர். ஜி.எப். ராஜேந்திரம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் மற்றும் பிரதிப் பதிவாளர் ஏ. தையுப் மற்றும் பிரதிப் பதிவாளர்கள் சிரேஸ்ட உதவிப் பதிவாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment