Header Ads



திருடிய கோழியை விற்பனை செய்ய வந்த இடத்திலிருந்த, தொலைபேசியை திருடியவர்கள் சிக்கினர்

பக்கத்து வீட்டிலிருந்த கோழியைத் திருடி வேறொரு இடத்திடல் விற்பனை செய்யவந்த இரு இளைஞர்கள் அங்கிருந்த கையடக்க தொலைபேசியை திருடிச் சென்ற போது வசமாக மாட்டிக் கொண்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடைப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களுடைய பக்கத்து வீட்டிலிருந்த கோழியை களவாடி அதனை விற்பனை செய்வதற்காக ஒரு இடத்திற்குச் சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள் கொண்டுவந்தது களவாடப்பட்ட கோழி என்று தெரியாதவர் கோழியை பெற்றுக் கொண்டு பணத்தை உள்ளே எடுக்கச் சென்றபோது அங்கிருந்த கைத்தொலைபேசியை களவாடியுள்ளனர்.

தொலைபேசியை களவாடிய இருவரையும் மடக்கிப் பிடித்த சிலர் குறித்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் கொண்டுவந்தவை களவாடப்பட்ட கோழி என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.