Header Ads



இலங்கைக்கான கனடாவின் தூதுவருடன், புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்டசிவில் சம்மேளனம் சந்திப்பு


இலங்கைக்கான கனடாவின் தூதுவர்       டேவிட் மெக்நூன் அவர்களுடனான சந்திப்புபொன்று கடந்த திங்கள் கிழமை 2019/06/03 புத்தள கிராம அபிவிருத்தி நிர்வாக வளாகத்தில் இடம் பெற்றது. இதன்போது பலவநதமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லீம்களின் யதார்த்த 1990 ஆம் ஆண்டின் நிலைமைகளையும் இன்றைய  சமகாலநிலையும் இதனால் அகதிகளாக வாழ்பவர்கள எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்  தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதன்போது புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் சார்பாக செயலாளர் ஹஸன் பைறூஸ் யாழ் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிகளாகமுன்னால்   பிரிதி மேயர் எம்.எம்.சீ.பஸீர் , லத்தீப் முஹம்மது ஜீலான் அஷ்ஷேக் அப்துல் ஹமீட் நளீமீ , முஹம்மது குத்தூஸ் தொடர்பாளராக  இமாம் முஹம்மது இன்ஹாம் பிரசன்னமாக இருந்து தங்களது வருகையை பிரதிநதிப்படுத்தி கருத்துககளை தெரிவித்திருந்தார்கள்.

மாஷா அல்லாஹ் எம்மவர்களின் களநிலைகள் தெளிவுபடுத்தப்பட்டன் மேலும் யூ என் ஓ வினால் முன்வைக்கப்பட்ட நிலைமாற்றலு்கான நீதி ,உண்மை , மீள்நிகழாமை, இழப்பீடுகள் போன்றவற்றை மையப்படுத்தி எமது நிலைமைகளின வகிபாகத்தையும கொண்ட ஆவணத்தையும், மீள்குடியேற்றத்தின் தடைகளையம் அதனை நிவர்த்திக்க ஏதுவான சமாந்தர கட்டமைப்பு நியைில் ஒருபகுதி மீள்குடியேற்ற தேவையை நிவர்த்தி்க்க்கோரி கனடா தூதுவரிடம்  ஆவணப்படுத்தலுடன் மனுக்கள் கையளிக்கப்பட்டது 

புத்தள வாழ்  யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்டசிவில் சம்மேளனம்.

No comments

Powered by Blogger.