Header Ads



வழக்குத் தாக்கல்செய்ய வந்து குவிந்துள்ள விண்ணப்பங்கள் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ந்து முறையிடுங்கள்


- AAM. Anzir -

அபாயா கட்டுப்பாடு மற்றும்  அபாயாவுக்கு தடை விதித்த விவகாரங்கள் குறித்து நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல்செய்ய முன்வருமாறு முஸ்லிம்களிடம் கோரப்பட்டிருந்தது.

இதுகுறித்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்வதற்காக, பலநூறு முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளதாக jaffna muslim இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

இவ்வார இறுதிக்கிடையில் நீதிமன்றில் மனுத் தாக்கல்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அபாயா கட்டுப்பாடு மற்றும் அபாயா தடைக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகளை செய்யுமாறு முஸ்லிம்களிடம், முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Please tell us whether men could complaint on behalf of their women.

    ReplyDelete

Powered by Blogger.