Header Ads



வாரியபொலயில் பௌத்த, குண்டர்கள் அடாவடி - முஸ்லிம் வர்த்தகருடைய கடை மீது தாக்குதல்


வாரியபொல மிரிஹம்பிடிய அமைதியின்மையை அடுத்து அங்கு  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிரிஹம்பிடியவில் இன்று -16- பகல் வேளை  பள்ளிவாயலுக்கு வந்த பெரும்பான்மை வாலிபர்கள் சிலர் பள்ளிவாயல் மேல் மாடிக்கு சென்று, ஹிப்ல் மதரஸா நடக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ள அதேவேளை அடிப்படைவாதம் போதிக்கப்படும் இடம் என கூறி சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அப்பிரதேச முஸ்லிம் சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளதை தொடர்ந்து அங்கு முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ள அதேவேளை அங்கிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை தாக்குதல் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.