Header Ads



ரணிலின் ஆசிர்வாதத்துடன், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் - தலதா

ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என நீதி மற்றும் சறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எமது கட்சியில் இருக்கும் சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகக் வேண்டும் என்று நாங்கள் இன்று நேற்று அல்ல, பல வருடங்களுக்கு முன்பிருந்தே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். வறிய மக்களின் கவலையை  உணர்ந்து, மக்களுக்கு சேவை செய்ய முடியுமான தலைவராகவே நாங்கள் அவரை பார்க்கின்றோம் என்றார்.

இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

1 comment:

  1. கோத்தபாய ஜனாதிபதியாக வருவது 95% உறுதி கண்ணு. நீங்க எல்லாம் இப்பதிய கனடா சுவிஸ் எண்டு ஓடி ஒழிய ரெடி ஆகுங்கொ

    ReplyDelete

Powered by Blogger.