சஜித்துக்கு விதிக்கப்பட்ட தடை
இந்தியப் பிரதமரின் 09.06.2019 வாகன தொடரணி கொழும்பிலுள்ள இந்திய இல்லத்துக்கு வந்தபோது அவரின் வாகனத்தை உள்ளே விட்ட இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பின்னால் மற்றுமொரு வாகனத்தில் வந்த சஜித்தை உள்ளே விடவில்லை . அங்கு சந்திக்க வருவோர் பட்டியலில் சஜித்தின் பெயர் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டது.
என்ன கூறியும் சஜித்தை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காத காரணத்தினால் அவர் இந்திய இல்லத்தின் வெளியில் நிற்கவேண்டியேற்பட்டது. பின்னர் பிரதமர் ரணில் அங்கு செல்லும்போது சஜித் வெளியில் நிற்பதை கண்டு தன்னுடன் உள்ளே அழைத்துச் சென்றதாக தகவல் .
Post a Comment