நிபந்தனைகளுடன் பிணை, வழங்கப்பட்டது ஷாபி ரஹீமுக்கு
தொலைத்தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள், வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் (முஸ்லிம் காங்கிரஸ்) ஷாபி ரஹீமுக்கு பல நிபந்தனைகளுடன் பிணைவழங்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 7ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்லையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது மக்கள் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட, முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்பாடலை இடையூறு செய்யக்கூடிய அதிசக்தி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்கள்(ஜேமர்) மற்றும் வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றுடன் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம் கைது செய்யப்பட்டிருந்தார்.
Post a Comment