Header Ads



முஸ்லிம்களை மன்னிப்பு கோர, வைக்காமல் விடமாட்டேன் - சங்கரட்ண தேரர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி அவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரகம் மேற்கொண்ட முஸ்லிம் தரப்பினர் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியே ஆக வேண்டும் என்று கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை -23- காலையில் பொலிஸ் தலையீடு காரணமாக உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்த பிற்பாடு விகாரையில் வைத்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு

நாம் கடந்த சுமார் 30 வருட காலமாக தரம் உயர்த்தி கொடுக்கப்படாமல் இருக்கும் தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெறுவதற்காகவே நீதியான போராட்டத்தை முன்னெடுத்தோம். எல்லா மக்களும் கல்முனையில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் சந்தோசமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எமது பெருவிருப்பம் ஆகும்

ஆயினும் முஸ்லிம் தரப்பினர் எமது போராட்டத்தின் இலட்சிய நோக்கத்தை குழப்புவதற்காக அநீதியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக இவர்கள் எம்மிடம் பகிரங்க மன்னிப்பு கோரியே ஆதல் வேண்டும். மன்னிப்பு கோர வைக்க செய்யாமல் விடவே மாட்டோம். அதற்கான வழிமுறைகளும் எம்மிடம் உள்ளன. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை நிச்சயமாக தரம் உயர்த்தி தருவோம். அது வரை ஓயவே மாட்டோம் என்றார்

(தர்மேந்திரன்)

3 comments:

  1. தங்களின் சிந்தனைக்கு உடன்படாத ஏனைய இலங்கையர்களை அவமதித்து அவர்களுக்கு அனியாயம் செய்து அவர்களின் உடைமைகளை அழித்த இந்த காவிநிற பிடைவை கட்டிய அதையே தங்களின் தீயசெயல்களுக்கு ஆயுதமாக சாது ஞானரசான தேரை, ரத்ன தேரை போன்றவர்கள் பிரபல்லிமாகிவிட்டார்கள் என்ற மனநோயால் இவனும் பீடிக்கபட்டு அந்தவழிமுறை கையால முயற்சிக்கின்றான் மாற்று சிந்தனையுடைய மக்களை தன்அடிமைகளாக வாழவேண்டும் என்ற சிந்தனைகள் சத்போதய சில சாதுகளின் உள்ளங்களில் இனவெறி தீ பரவியுள்ளது!

    ReplyDelete
  2. அப்படியே நாற்பது வருடமாக தமிழ் மக்கள் போராடும் ஈழத்தையும் இப்படி நீதியான முறையில் போராடி வாங்கி கொடுப்பீங்களா தேரர் அவர்களே.....! குடத்தோட கோபிச்சிகிட்டு ....... கழுவாமல் நாறிப் போக போறிங்க.....!

    ReplyDelete
  3. அடேய் நாயே , சீறாப்புராணத்தில் நபிகள் நாயகம் மானுக்கு பிணை நின்ற மார்க்கம் டா இஸ்லாம் மார்க்கம்.
    அதை பின்பற்றும் மக்கள் முஸ்லிம்கள்.
    தீவிரவாதிகள் நாங்கள் அல்லே நீங்கள்தான்

    ReplyDelete

Powered by Blogger.