ஹக்கீமும், றிசாத்தும் தற்போதைக்கு அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டார்கள்
- AAM. Anzir -
பதவி துறந்த ரவுப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் தற்போதைக்கு அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தன.
முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கும் சிக்கல்கள் நீங்கி, சுமூக நிலை ஏற்படும்வரையும் அவசரகால சட்டம் நீக்கப்படும் வரையும் அவர்கள் இருவர்களுடைய இந்த நிலைப்பாடு தொடருமெனவும் மேலும் அறிய வருகிறது.
ஹக்கீம் மற்றும் றிசாத் ஆகியோரிடையே இதுபற்றிய புரிந்துணர்வு நீடிப்பதாகவும், சமூகமும் இதனையே விரும்புவதாகவும், அந்தவகையில் இருவரும் தற்போதைக்கு அமைச்சுப் பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அறியக்கிடைத்தது.
Post a Comment