முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான, சுற்றுநிரூபத்தை வெளிட பிரதமர் உறுதியளித்தார்
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இதன்போது, முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை வெளிடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமர் உறுதியளித்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹரீஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கண்டியில் மாநாயக்க தேரர்களையும், அதன் பின்னர் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment