Header Ads



நானும் அமைச்­ச­ராக இருந்­தி­ருப்பின், முஸ்­லிம்­களின் பாது­காப்­பிற்­காக இரா­ஜி­னாமா செய்­தி­ருப்பேன் - பைஸர்

முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு நலன் கருதி, அவர்­களின் விடி­ய­லுக்­காக தான் எந்­நே­ரத்­திலும் என்னை அர்ப்­ப­ணிக்கத் தயா­ராக உள்ளேன். இந்­நி­லையில், தற்­போது நானும் அமைச்­ச­ராக இருந்­தி­ருப்பின் முஸ்­லிம்­களின் பாது­காப்­பிற்­காக இரா­ஜி­னாமா செய்­தி­ருப்பேன் என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா,  பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை­யின்­போது தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கும்­போது, நானும் தற்­போது அமைச்­ச­ராக இருந்­தி­ருப்பின், ஏனைய சக அமைச்­சர்­க­ளுடன் இணைந்து, எனது இரா­ஜி­னாமாக் கடி­தத்­தையும் கைய­ளித்­தி­ருப்பேன்.

இலங்கை சுதந்­திரம் அடைந்­த­திற்குப் பின்னர், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு வைர­மா­கவும், குரோ­த­மா­கவும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை, நான் இதற்கு முன்னர் ஒரு­போதும் பார்த்­த­தில்லை.

இதன் கார­ண­மா­கவே, அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு முஸ்லிம் அமைச்­சர்கள் தீர்­மா­னித்­தனர்.

முஸ்லிம் மக்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­க­மு­டி­யா­விடின், முஸ்லிம் அமைச்­சர்கள் அமைச்சுப் பத­வி­களை வகிப்­பதில் எவ்­விதப் பய­னு­மில்­லை­யென முஸ்லிம் மக்­களின் மிக நீண்ட நாள் வேண்­டு­கோ­ளாக இருந்­த­தையும் நான் அறிவேன்.

இந்­நி­லையில், இன்று நானும் அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக அங்கம் வகித்­தி­ருந்தால், முஸ்­லிம்­களின் பாது­காப்­பிற்­காக, ஏனைய அமைச்­சர்­க­ளுடன் எனது இரா­ஜி­னாமாக் கடி­தத்­தையும் வழங்­கி­யி­ருப்பேன்.

முஸ்­லிம்கள் கிறேண்ட்பாஸ், அளுத்­கம, கிந்­தோட்டை, கண்டி, திகன போன்ற பகு­தி­களில் இடம்­பெற்ற இன வன்­முறைத் தாக்­கு­தல்­க­ளின்­போது பல்­வேறு இன்­னல்­க­ளையும் கஷ்­டங்­க­ளையும் அனு­ப­வித்து வந்­தனர். இதன்­போது எல்லா இடங்­க­ளுக்கும் நான் நேர­டி­யா­கவே சென்று, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து, அவற்­றுக்­கான என்­னா­லான பல உட­னடித் தீர்­வு­க­ளையும் பெற்றுக் கொடுத்தேன். இம்­முறை மினு­வாங்­கொடை, கொட்­டம்­ப­பிட்­டிய உள்­ளிட்ட பல முஸ்­லிம்கள் வாழும் பகு­திகள், மிக மோச­மான முறையில் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்­டுள்­ளன. இத்­தாக்­குதல் சம்­ப­வங்கள், முஸ்­லிம்­க­ளுக்கு கடு­மை­யான மன உளைச்­சலைக் கொடுத்­துள்­ளன.

இத்­தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யி­லேயே அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும், தமது அமைச்சுப் பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து விலகி இராஜினாமா செய்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்களின் இவ்வாறான துணிகரச் செயலை, இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் விடிவுக்காகவும் நானும் என்னை எச்சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன் என்றார்.

6 comments:

  1. அட்ரா சக்கை.

    ReplyDelete
  2. Now you are Ok, but do not go to UN conference with the President next time.

    ReplyDelete
  3. Now you are Ok, but do not go to UN conference with the President next time.

    ReplyDelete
  4. ஒரு உண்மையான முஸ்லிம் இப்படித்தான் சிந்திப்பான். இந்த முயற்சி தொடர உங்கள் பங்களிப்பை வளங்குங்கள்.

    ReplyDelete
  5. முஸ்லிம்களின் அரசியல் பலத்தை இல்லாமற்செய்யும் தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டி சிங்கள இனவாதிகளை விட அதிகமாக துடித்தவன் நீ. உம்மை ஒரு போதும் முஸ்லிம்கள் நம்ப போவதில்லை. சிங்கள அரசியல் காட்சிகளில் உமக்கான போனஸ் ஆசன கதவு மூடப்பட்டுவிடும் என்கிற பயத்தில் இன்று முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்தை கூறி நீயம் முஸ்லீம் உறுப்பினர்களின் கூட்டில் நுழைய பார்க்கிறாய்.

    ReplyDelete

Powered by Blogger.