Header Ads



6 முஸ்லிம் அமைச்சர்களுக்கு பின்வரிசை, 3 பேருக்கு முன்வரிசை ஆசனங்கள்

அரசாங்கத்திலிருந்து விலகிய 6 முஸ்லிம் அமைச்சர்களுக்கு நாடாளுமன்றில் பின்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

படைக்கள் சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியமைக்கான கடிதம் சபாநாயகருக்கு கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த ஆசன ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் ஆகியோரது முன்வரிசை ஆசனங்களில் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்த முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.