Header Ads



ஹிஸ்­புல்லாவுக்கு எதிராக 4 ஆம் மாடிக்குச்சென்று அருண்காந்த் சாட்சியம்

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தில் ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கி­யி­ருந்தார். 

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில் பல்­வேறு காணொளி களை வெளியிட்டார். 

பேட்­டியில் வெளியி­டப்­பட்ட ஆவ­ணங்கள் மற்றும் காணொ­ளிகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணைப் பிரி­வினால் கோரப்­பட்­ட­தற்­கி­ணங்க, அருண்காந்த் நேற்று திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கினார்.

அதன்­படி காலை 9 மணி­யி­லி­ருந்து பிற்­பகல் ஒரு மணி­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து, காணொளி அடங்­கிய கைய­டக்கத் தொலை­பேசி மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காகப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­களின்போது இத்­த­கைய செயற்­பா­டு­களில் ஏன் ஈடு­ப­டு­கின்­றீர்கள்? உங்­க­ளு­டைய இலக்கு என்ன?" என்ற அதி­கா­ரி­களின் கேள்­விக்கு, முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்­லாவு­டனோ அல்­லது முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரு­டனோ எமக்கு எது­வித தனிப்­பட்ட பிரச்­சி­னை­களும் இல்லை. ஆனால் ஹிஸ்­புல்லா மத­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தொடர்ச்­சி­யாக செயற் பட்டு வந்தமையாலேயே நான் இவ்வாறு அவருக்கெதிராக ஆதாரங்களைப் பகிரங்கமாக வெளியிட்டேன்" என்று பதில ளித்ததாக அருண்காந்த் தெரிவித்தார்.

3 comments:

  1. இவன் ஒரு மிகப் பெரும் இனவாதி

    ReplyDelete
  2. இந்து கோயில்களை இடித்து அந்த இடத்தில் சந்தை ஒன்றை கட்டியதாக ஹிஸ்புல்லா ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறி இருந்தார். அது தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது. அதே போன்று முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களுக்கு எதிராக செயல்பட வைத்ததாக ஒரு வாக்குமூலமும் வெளியாகி இருந்த்து.

    1990 ஆண்டு காலப்பகுதியில் அனேகமாக இந்து கோயில்கள் முஸ்லிம்களால் உடைக்கப்பட்டது அதே போல் அதிகமான தமிழ் மக்களும் முஸ்லிம் ஊர்காவல் படையால் படுகொலை செய்யப்பட்டன. எனவே அன்று ஹிஸ்புல்லா வழங்கிய ஆயுதங்களை வைத்து இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தன என்பது பற்றிய விசாரனை அவசியமான ஒன்று.

    ReplyDelete

Powered by Blogger.