Header Ads



அடுத்த 30 நாட்களுக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள்

பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் இருவர் 15 நாட்கள் கடந்து செல்லும் முன்னர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளதாகவும் ஏனையோர் அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு உதவினார் என்ற கடுமையான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள றிசார்ட் பதியூதீனை காப்பாற்றும் நாடகத்தையே இவர்கள் அரங்கேற்றி வருகின்றனர் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று -20- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கபீர் ஹாசிம்,அப்துல் ஹலீம் ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றனர்.

அதேபோல் முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் உட்பட அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள். முன்னாள் றிசார்ட் பதியூதீனும் தமது கட்சியின் தீர்மானத்திற்கு மீண்டும் பதவியேற்பார்.

30 நாட்களுக்கு பின்னர், நாங்கள் பதவி விலகி நியாயமான விசாரணை நடத்தும் வரை காத்திருந்தோம். எங்கே எமக்கு எதிரான குற்றச்சாட்டு. எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதா? எனக் கூறி, றிசார்ட் பதியூதீன் அமைச்சர் பதவியை ஏற்று நாடகத்தை முடித்து வைப்பார் எனவும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. பெரிய சாஸ்திரி. வீரவன்ஸ ஆட்சியில் ஆஸ்தான சாஸ்திரி ஆகிவிடுவாரோ?

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் பிரச்சினையில் முஸ்லிம்கள்தான் கவலைப் படுவார்கள்.சும்மா பெயர்இருந்தால் மட்டும் போதாது.இதற்கு ஈமானிய உணர்வும் வேண்டும்.எதை வேண்டுமானாலும் பேசலாம் .இருப்பினும் இறுதி முடிவு சரியாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Weru ennada punnakku unakku wenum....1 monthla kutrawaliyaaha iruntha kutrattha etkanum..illanda amaiccha etkanum...neeyellaam enna ummath...just only name.muslim...
    Stop ur nounses talk...

    ReplyDelete
  4. Who is this Muzammil, Please let muslim community know, if anyone knows this guys biodata. Because, it seems that this fellow is a black sheep of Muslim Community.

    ReplyDelete
  5. நீ எதுக்குப்பா முஸ்லிம்களை பற்றி பேசுகிறாய். சிங்களவரே
    ஒற்றுமையாகு கூட்டம் நடக்குதாம். போய் சேர்ந்துக்கொள்

    ReplyDelete

Powered by Blogger.