அல் - ரிபாய் மகா வித்தியாலயத்தில் 2 மாடிக் கட்டிடத்தை, மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி
தம்பாளை அல்-ரிபாய் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 186 இலட்ச ரூபா செலவில் தம்பாளை அல்-ரிபாய் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 08 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.
பாடசாலையின் அதிபர் ஏ.அஸீஸ், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post a Comment