Header Ads



ஜூலை 22 க்கு பிறகு, அவசரக்கால சட்டம் அமுல்படுத்தப்படாது

தற்பொழுது அமுலில் உள்ள அவசரக்கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பான சில காரணங்களுக்காகவே இம்முறை, அதாவது ஜூலை மாதம் 22ஆம் திகதி வரை அவசரக்கால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மீண்டும் குறித்த சட்டம் நீடிக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.