Header Ads



கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மதநில மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

நேற்று இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

08 தமிழர்கள் மற்றும் 02 சிங்களவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதுடன், அதில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2005-2015ம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்பதால் அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதமும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக 03 ​பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தமை கூறத்தக்கது.

No comments

Powered by Blogger.