Header Ads



“ஜாமாஅத்” அமைப்பின் பெயரில் விகாரதிபதியை மிரட்டி 10 கோடி ரூபா, பணத்தை பெறமுயன்ற 3 பேர் கைது

தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி ஜவாத் அமைப்பு எனும் பெயரில் மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது குறித்த குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 3 தொலைபேசிகள் பொலிஸாரனைால் கைப்பற்றப்பட்டுள்ளன.

16, 25 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. From which community are they? I am sure they are not Muslims? if they with muslim names first of all their names would be quoted no?

    ReplyDelete

Powered by Blogger.