Header Ads



நாளை 10-06-2019 ஹிஜாப் அணிந்து, அலுவலகம் செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள்


- காலை 8.30 யிற்கு முன்னரே அலுவலகம் சென்று கையொப்பமிட்டு விட்டு, உங்கள் கடமைகளை ஆரம்பியுங்கள்.

- கடமைக்கு செல்லாமல் லீவு எடுக்க விரும்புபவர்கள், தாபனக் கோவைக்கு அமைவாக உங்கள் லீவுகளை அறிவியுங்கள்.

- உங்களிடம் ஆடை பற்றி உங்களிடம் வினவும் உரிமை உங்களது மேலதிகாரிக்கு மாத்திரமே உரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- சுற்று நிருபத்திற்கு அமைவாக ஆடை அணியவில்லை என கடமையிலிருந்து உங்களை தடுக்க முடியாது.

- *இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 183 யின் பிரகாரம் ஒரு அரச அலுவலரை கடமை புரிவதிலிருந்து தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.* ஆகையால், உங்களை கடமை புரிவதில் இருந்து தடுக்கவே முடியாது என்பதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

- முடிந்த வரை நல்ல முறையில் பேசி அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் பிரதியினை உங்கள் வசம் வைத்திருந்து தேவைப்படின் சமர்ப்பியுங்கள்.

- அலுவலகத் தலைவர்கள் மறுதலிக்கும் பட்சத்தில் அவர்களிடம் மறுதலிப்பு தொடர்பில் எழுத்து மூல கட்டளையை பெற்றுக் கொள்ளுங்கள்.

- உங்களை கையொப்பமிடுவதிலிருந்து தடுக்க முடியாது. அதையும் மீறித் தடுத்தால் அது தொடர்பில் உங்கள் மேலதிகாரிக்கு ரெலி மெயில் மூலம் அறிவியுங்கள். அதன் பிரதியை வைத்துக் கொள்ளுங்கள்.

- இறுதியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையை செய்ய விடவில்லை என முறைப்பாடு செய்யுங்கள்.

மேலதிகத் தகவல் தேவைப்படின் +94 77 230 1539 என்ற இலக்கத்தில் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்

-குரல்கள் இயக்கம்-
குரலற்றோருக்கான குரல்கள்

1 comment:

  1. Really appreciated, your service has to be continued...

    ReplyDelete

Powered by Blogger.