Header Ads



முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - சிறீதரன் Mp

நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட அணியினரை விசாரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்டு ஒரு குழு ஈடுபட்டிருக்கையில், அதற்காக முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவதும், மனரீதியில் பாதிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய ஒன்றாகும்.

மேலும், தமிழினம் இம்சிக்கப்படுவதை ராணுவம் மகிழ்ச்சியோடு பார்க்கிறது. ராணுவம் இவ்வாறு மகிழ்வுடன் ஒரு இனத்தை அடக்க முயல்கின்றமையானது, இவ்விடயங்களின் பின்னணியில் இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் அணியினர் காணப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

எனவே, அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரித்து உண்மையை கண்டறியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. எங்களை தலை நிமிர வைத்துவிட்டீர்கள். நன்றி சிறீதரன். இதைதான் தந்தை செல்வநாயகம் தான் வாழ்ந்த காலமெல்லாம் செய்தார்.

    ReplyDelete
  2. இதுதான் தமிழனுக்கும் முஸ்லீம்களுக்குமான வித்தியாசம்.
    உங்களின் வலிகள் அறிந்து தமிழர்கள் துடிக்கிறார்கள், வருத்தப்படுகிறாரகள். ஆனால் நீங்கள் கொத்து கொத்தாக சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொண்று குவித்தை பாற்சோறு கொடுத்து சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடிய அரக்கர் கூட்டம் தானே....

    ReplyDelete
  3. Welcome hon.Sritharan......

    ReplyDelete
  4. அப்படி சொல்லவேண்டாம். நான் ஒரு மலைநாட்டு முஸ்லீம். நாம் சிறுவர்களாக இருந்தபோது வளர்ந்ததும் விளையாடியதும் தமிழச்சிகளின் மடிகளிலும் தமிழர்களின் தோல்களிலும் தான் என்பதை பெருமையுடன் சொல்கிறோம்.

    ReplyDelete
  5. @shan எனது பெயரும் Shan தான்.நான் இதற்க்கு முன்னர் jaffnamuslim இல் இப் பெயரில் comment எழுதி உள்ளேன். நீங்களும் இதே பெயரில் comment எழுதாமல் வேறு பெயரில் எழுத முடியுமா ?

    ReplyDelete

Powered by Blogger.