Header Ads



பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு, மரண தண்டனை விதிக்க வேண்டும் - மரிக்கார் Mp

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பதனை சட்டமாக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த தனி நபர் பிரேரணை இன்றைய தினம் -07- நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதே பொருத்தமானது என அவர் தனது பிரேரணையில் முன்மொழிந்துள்ளார்.

இவ்வாறான நபர்களின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. This type of utterance from the so called politician is nothing but the sheer deliberation of immaturity and total ignorance of the rule of the country as well as his own norms and culture.

    ReplyDelete
  2. This proposal must be legalized without debate.

    ReplyDelete

Powered by Blogger.