Header Ads



"இது சுத்தப் பைத்தியக்காரத்தனம், IS தீவிரவாதத்தை எவரும் ஏற்க மாட்டார்கள், முற்றாக ஒழிக்க வேண்டும்”

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள்.

இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அமைச்சரே எந்த Muslim மும் பயங்கரவாதத்துக்கு ஆதரவில்லை.அதனால்தான் அவர்களை சாய்ந்தமருதில் காட்டிக் கொடுத்தாவது இன்னோரு பயங்கர அழிவை தடுத்தோம்.ஆனால் நீங்கள் பாசிச புலிகளை தெளிவான கொள்கை வாதிகல் என பேச வேண்டாம்.உங்களுக்கு சொல்லத் தேவையில்லை அவர்கள் ஒரே நிலப்பரப்பில் ஒரே மொழி பேசிய எங்களுக்கு செய்த அட்டூலியங்கல்,அனியாயங்கல்.நீங்கள் அந்த பாசிச வாதிகளை ஏன் சுத்த வாலிகலாக சித்தரிக்க முயலுகிரீர்கல்

    ReplyDelete
  2. இந்த சமுதாயத்தை பீடித்த சனியனே புலி பயங்கரவாதிகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்யவில்லையா?

    ReplyDelete
  3. இவனே பெறிய சந்தர்ப்பவாதி, புலிகளைப்பற்றி பேச வந்திட்டாரு ஒன்னும் தெறியாமல், கண்டியானுக்கு கிழக்கைப்பற்றி என்னடா தெறியும்?

    ReplyDelete

Powered by Blogger.