Header Ads



மட்டக்களப்பில் IS தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் - 14 நாட்களுக்கு பின் இன்று கண்டுபிடிப்பு (படங்கள்)


 - பாறுக் ஷிஹான் -

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை ஒல்லிக்குளம் பகுதியில்  சஹாரான் குழுவினர் தங்கியிருந்த இடம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று(5)முற்றுகையிடப்பட்டுள்ளது.

இங்கு குண்டுகளை அடைத்து கொண்டு செல்ல பயன்பாடுத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களும் மீட்கப்பட்டுள்ளது. இதே போன்ற குழாய்களே குண்டுகளுடன் கட்டுநாயக்கா விமானம் நிலையத்துக்கு அண்மையில் கடந்த 21 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்தே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 100 மீற்றர் தூரத்தில் யாரும் உள்ளே நுழையும் போது அதனை கண்டுகொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், இலகுவில் தாம்  வெளியேறி செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.