Header Ads



இனவாத மோதலை ஏற்படுத்த நாமல் குமார, தயாராகிறான் என புலனாய்வு பிரிவினர் கண்டறிந்திருந்தனர்

ஊழல் எதிர்ப்பு படையின் பணிப்பாளர் நாமல் குமார, இனவாத மோதலை ஏற்படுத்த தயாராகி வருவதாக அரச புலனாய்வு பிரிவினர் கண்டறிந்திருந்தனர் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று -24- நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. நாமல் குமார செல்லவிருந்த பிரதேசங்கள் பற்றிய தகவல்களும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்தது எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாமல் குமார என்ற நபரே, ஊடக சந்திப்புகளை நடத்திய தகவல்களை வெளியிட்டிருந்தார்.

எனினும் அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், அப்படியான திட்டங்கள் பற்றிய தடயங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

1 comment:

  1. அப்போ தெரிந்தும் தடுக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.