Header Ads



நாடு கடத்தப்பட்ட மதூஷ், பொசிசாரின் பிடியில் - துருவித்துருவி விசாரணை


டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கையின் பிரபல பாதாளக்குழு​வொன்றின் தலைவரான மாக்கந்துந்துர மதூஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா விமானநிறுவனத்தின் யு. எல். 226 என்ற விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மதூஸை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து, குற்றப்புலனாய்வு தலைமையகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி மதூஸ் உள்ளிட்ட 31 பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.