"இனி முஸ்லிம்கள், யாரையும் நம்ப முடியாது"
வருடக் கணக்கில் காதலித்து திருமணம் முடித்தவருக்கு வேறு தொடர்புகள் இருக்கும் பொழுது....
மகளை கற்பழிக்கும் தந்தைகள் இருக்கும் பொழுது....
பெற்று வளர்த்த தந்தையை பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பொழுது....
ஒரே வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் சொத்துக்கு சண்டை பிடிக்கும் பொழுது....
வணக்கஸ்தலங்களில் சண்டையும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் நடக்கும் பொழுது....
நாட்டை கட்டி எழுப்புவோம்,மக்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சொல்லிவிட்டு தமது பொக்கட்டை நிரப்பும் அரசியல்வாதிகள் இருக்கும் பொழுது...
வேலி சண்டைக்காக பக்கத்துவீட்டுக் காரனை கொலை செய்யும் பொழுது...
உயிர் நண்பனே தனது மனைவியை தூக்கிக் கொண்டு போகும் பொழுது...
ஒன்றாக உண்டு உறங்கிய நண்பர்களே, தீவிரவாதி என்று சந்தேகத்துடன் பார்க்கும் பொழுது....
ஆம் இப்படியான நம்பிக்கையான மனிதர்கள் வாழும் இந்த நாட்டில், முஸ்லிம்களை மட்டும் உங்களால் நம்ப முடியாதுதான்.
Safwan
Safwan
Post a Comment