Header Ads



சிறையிலிருந்து வெளிவரும்போது எடுத்த, தீர்மானத்திலிருந்து பல்டி அடித்துவிட்டேன் - இன்று ஞானசாரர் தெரிவிப்பு

சிறையிலிருந்து வெளியேவரும் போது எடுத்த தீர்மானத்தை தற்போது மாற்றிவிட்டேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தலதாமாளிகைக்கு இன்று -26- ஆன்மீக பயணம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்ட தேரர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

சிறையிலிருந்து வெளியேறிய பின்னர், எதிர்காலம் குறித்து அறிவிப்பொன்றை விடுத்திருந்தேன். இந்த அறிவிப்பால் இளைஞர்கள் மனம் நொந்துவிட்டார்கள். ஓய்வு வேண்டாம், வாருங்கள் என அழைப்பு விடுத்தனர்.

எனவே, இளைப்பாறாது, நாட்டுக்காகவும், சாசனத்துக்காகவும் தொடர்ந்தம் குரல் எழுப்புவேன். அன்று எடுத்த தீர்மானத்தை தற்போது மாற்றிக்கொண்டுள்ளேன்.

நான் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கைக்கூலி அல்லன். அப்படி இருந்திருந்தால் சிறையில் அடைத்திருப்பார்களா என்ன?

தியானம் செய்து எஞ்சியுள்ள காலத்தை கடப்பதற்கு எடுத்த முடிவை மாற்றிவிட்டேன் நாட்டுக்காக நான் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என்றார்.

5 comments:

  1. You are a Biggest traitor.... We can expect anything from you...
    You Terror Monk.

    ReplyDelete
  2. If politician not help you. Now you will stay inside bars. You stupid don't think that we are also stupid like you to believe what ever you say.
    You Terror Monk..

    ReplyDelete
  3. He is going to make the lawyers and judges very busy........

    ReplyDelete
  4. தஜ்ஜால் மீண்டும் வந்துட்டான்.

    ReplyDelete
  5. Every politician needs this man to do politics in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.