Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால், இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என ஜே.வி.பி இன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கு அவர் தொர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார் என்று அரச தரப்பால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால் இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும்.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோத்தபாய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார்.

அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

ராஜபக்ச ஆட்சியில் மனிதப் படுகொலைகளைப் புரிந்த கோத்தபாய ராஜபக்சவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவ விட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்த பாரிய தவறாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. Eppadi Adipaha Annan-thambi, mama-marumahan, allakkai-annakkavdi, atchi thane inga nadakkuthu. Intha nattula piranthathe waste pola vilanguthu, British karanukku keeleye nama irunthu irukkalam. Suthamthiram kidachathu intha nattukku sapha keda poivittathu British karan seitha develop la irunthu oru angulathai thanum mari vantha singala atchiyalarhalana moothevihal seithanuhala? Atharku mukkuvanuhalum vittanuhala irandu naichamoohamum intha nattin kodari kambuhalaha irunthu vittu intha nattai mulumaiyaha nesikkinra Muslim kala payangaravathihal. Koolippadai sahran oru anpthan villum eithavanum engada naihala

    ReplyDelete
  2. 100% TRUE SPEAKING. Thank you. We do not need any old dirty politician president. Now we are in need of Good well talented Leader as President.
    May God Protect SriLanka from Dirty Politicians.

    ReplyDelete

Powered by Blogger.