Header Ads



முஸ்லிம் சமூகம், மீண்டும் தலைநிமிர வேண்டுமா..? ஒரேயொரு வழிதான் உள்ளது...!

“காகம் பறக்­காத ஊரு­மில்லை காத்­தான்­கு­டியான் வாழாத இட­மு­மில்லை” என்ற ஒரு பேச்­சு­வ­ழக்கு முஸ்­லிம்கள் மத்­தியில் இருந்து வரு­கின்­றது. சஹ்ரான் என்ற ஒரு மனிதன் அங்கு மக்கள் இருப்பை இன்று கேள்­விக்­கு­றி­யாக்கி விட்டான்.

இந்த நாட்டில் முஸ்­லிம்­களின் செல்­வாக்­கு­மிக்க நகர் காத்­தான்­குடி. அங்கு வாழ்­கின்ற ஒவ்­வொரு குடி­ம­கனும் மரண பயத்தில் உறைந்து போய் நிற்­கின்றான். குட்டி சவூதி என்ற அந்த மண் இன்று குப்­புற வீழ்ந்து கிடக்­கின்­றது. மொத்­தத்தில் நாட்டில் வாழ்­கின்ற ஒட்­டு­மொத்த முஸ்­லிம்கள் நிலையும் இதுதான் இன்று.

இந்தக் கட்­டுரை ஊடாக நாம் இந்த நாட்டில் வாழ்­கின்ற ஒவ்­வொரு இஸ்­லா­மிய பிர­சை­யையும் தனி­ம­னிதன், பிள்­ளைகள், பெற்றோர், மஹல்லா, ஜமாஅத், சமூக அமைப்­புகள், இயக்­கங்கள், அர­சியல் தலை­மைகள், பிர­தேச, தேசிய மட்­டங்கள் என்ற வகையில் சில செய்­தி­களை வழங்க முற்­ப­டு­கின்றோம்.

அப்­பாவி கிறிஸ்­தவ மக்கள் மீது நடாத்­தப்­பட்ட மிரு­கத்­த­ன­மான தாக்­குதல் இன்று நமது நாட்டை மட்­டு­மல்ல முழு உல­கத்­தையும் ஆட்டிப் போட்­டி­ருக்­கின்­றது. அதன் தலைவன் பக்­தாதி தமது இஸ்­லா­மிய சாம்­ராஜ்யம் தோற்­க­டிக்­கப்­பட்­டதால் அதற்குப் பழி­வாங்­கவே தாம் இலங்­கையில் இந்தத் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தா­கவும் வீடி­யோவில் முழு உல­கிற்கும் தகவல் கொடுத்­தி­ருக்­கின்றான். இதனால் அவன் இன்னும் உயி­ருடன் இருப்­பது உறு­தி­யாகி இருக்­கின்­றது.

இவ­னது இந்த அறி­விப்பு மலைக்கும் மடு­வுக்கும் முடிச்­சுப்­போ­டு­கின்ற கதை என்­பது மிகவும் தெளி­வா­கின்­றது. அவர்­க­ளது அரசு தோற்­க­டிக்­கப்­பட்­ட­தற்கு இந்த நாட்­டி­லுள்ள மக்­களை பழி­வாங்­கு­வது என்ன நியாயம் என்று கேட்­ப­தை­விட இந்த ISIS பயங்­க­ர­வாத அமைப்பின் நோக்­கமும் இலக்கும் மிகத் தெளி­வாக மீண்டும் ஒரு­முறை உல­கிற்குத் தெரிய வந்­தி­ருக்­கின்­றது.

இதனை இந்­நாட்டில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் மட்­டு­மல்ல, முழு உல­க­ளா­விய முஸ்­லிம்­களும் புரிந்து கொள்ள வேண்டும். இது முற்­றிலும் இஸ்­லாத்­திற்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான ஓர் அமைப்பு. இஸ்­லா­மிய பெயர்­களை வைத்துக் கொண்­டி­ருப்போர் எல்லாம் முஸ்­லிம்­க­ளு­மல்ல, இஸ்­லாத்தின் பெயரில் இயங்­கு­கின்ற அமைப்­புக்கள் எல்லாம் இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளு­மல்ல.

முஸ்­லிம்கள் அல்­லாத ஜே.வி.பி. மற்றும் விமல் வீர­வன்ச தரப்­பி­னர்­கூட இது அமெ­ரிக்­காவின் தேவைக்­காக உரு­வாக்­கப்­பட்ட அமைப்பு. எனவே தாக்­கு­தலைப் பாவித்து இலங்­கையில் அமெ­ரிக்கா காலூன்ற முனை­கின்­றது. இதற்கு அர­சாங்கம் இட­ம­ளிக்கக் கூடாது என்று கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றனர்.
நமது நாட்டில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு ஊடாக இந்த ISIS ஊடு­ருவி இருக்­கின்­றது என்­பது தற்­போது மிகத் தெளி­வாகத் தெரிய வந்­தி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான இயக்­கங்­களை இவர்கள் பணத்தால் விலைக்கு வாங்­கி­யி­ருக்­கின்­றார்கள். என­வேதான் ஓர் ஏழ்­மை­யான குடும்­பத்தில் பிறந்த சஹ்­ரானின் குடும்­பத்­தினர் சாய்ந்­த­ம­ரு­துவில் கொல்­லப்­பட்ட போது அவர்­க­ளிடம் பெருந்­தொகை பணம் கைப்­பற்­றப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் சொல்­லப்­பட்­டி­ருந்­தது.
படைத்­த­ரப்பு சுற்­றி­வ­ளைத்த பின்னர் இனியும் நாம் தப்ப முடி­யாது என்று தெளி­வாக உணர்ந்து கொண்ட சஹ்­ரானின் சகோ­த­ரர்கள், “நாய்­களே உங்­க­ளுக்­காகத் தான் போரா­டு­கின்றோம். உயிரைக் கொடுக்­கின்றோம். இந்­தாங்கள் இந்தப் பணத்தை சாப்­பி­டுங்­கள” என்று 5000 ரூபாய் நோட்­டுக்­களை கட்­டுக்­கட்­டாக வீசி எறிந்­தார்கள் என்று பிர­தேசத் தக­வல்கள் சொல்லி இருந்­தன.

எப்­படி இவர்­க­ளிடம் இந்­த­ளவு தொகை­யான பணம் வந்­தி­ருக்க வேண்டும். இந்தப் பணம் எங்­கி­ருந்து வந்­தது. தாக்­கு­தலில் சம்­பந்­த­மு­டை­ய­வர்கள் தமது குடும்­பத்­தினர், மனை­விமார் பெயரில் பல வாக­னங்­களைக் கொள்­வ­னவு செய்து பதிந்­தி­ருக்­கின்­றார்கள். எனவே இவை எல்லாம் எப்­படிச் சாத்­தியம். இவர்­க­ளுக்கு இந்தப் பணம் எங்­கி­ருந்து வந்­தது, யாரெல்லாம் இதனால் போஷிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற தக­வல்கள் விரைவில் தெரி­ய­வ­ரக்­கூடும்.

சகோ­தரப் பத்­தி­ரி­கை­யொன்­றிற்கு எழு­திய கட்­டு­ரையில் நாம் இப்­படி ஒரு தக­வலை சொல்லி இருந்தோம். சஹ்ரான் இதன் தலை­வ­னாக இருந்தால் முதல் தாக்­கு­த­லிலே அந்த இயக்கம் அவனைப் பலி கொடுக்­காது என்றும் இதற்கு வேறு தலைவன் ஒருவன் இருக்கக் கூடும் என்று சொல்லி இருந்தோம்.
ஆனால் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித எமது கருத்தை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உறுதி செய்து சஹ்ரான் உண்­மை­யான தலைவன் அல்ல. இதற்கு வேறு ஒரு­வனே தலைமை தாங்கி இருக்­கின்றான். நல்ல வேளை அவன் தற்­போது கைதாகி இருக்­கின்றான் என்றும் சொல்லி இருந்தார். தலைவர் கைதாகி இருந்தால் இன்னும் புதிய பல தக­வல்கள் வெளியில் வரும்.
எவ­ரெல்லாம் இந்த அமைப்­புடன் தொடர்பில் இருந்­தார்கள் என்று தெரிய அதிக வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

பிற சமூ­கத்­தினர் தம்மை சந்­தே­கிப்­பது எப்­படிப் போனாலும் இன்று ஒரு முஸ்­லி­முக்கு அடுத்த முஸ்­லிமில் நம்­பிக்­கை­யில்லை. அடுத்த வீட்­டுக்­கா­ரனை நம்­ப­மு­டி­யாது. தந்­தைக்குத் தனது பிள்­ளைகளை நம்ப முடி­யாது. பிள்­ளைக்குத் தனது தாயை தந்­தையை நம்ப முடி­யாது. வரு­கின்ற தக­வல்­க­ளின்­படி தாய், தந்­தை­யர்­களே தமது பச்­சிளம் பால­கர்­களை வெடி­குண்டு வைத்துச் சிதைத்­தி­ருக்­கின்­றார்கள்.

குழந்­தைகள் உடம்பில் கூட வெடி­குண்­டு­களை கட்டி இஸ்­லாத்­தின்­பேரால் அவர்­களைத் தியா­கி­க­ளாகப் பார்க்­கின்ற ஒரு கொடிய மன­நி­லைதான் இவர்­க­ளுக்கு இருந்­தி­ருக்­கின்­றது. மதத்­தின் பேரால் இவ்­வா­றான கொலை சம்­ப­வங்­களை நாம் இதற்கு முன்னர் நமது நாட்டில் எப்­போ­தா­வது கேள்­விப்­பட்­டி­ருக்­கின்­றோமா என்­ப­தனை முஸ்லிம் சமூகம் யோசிக்க வேண்டும்.

கொலை­யா­ளிகள் இலங்­கையை ஏன் தெரிவு செய்­தார்கள் என்­ப­தற்கு அர­சி­யல்­வா­தி­களும் ஆய்­வா­ளர்­களும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள். இலங்­கையில் சீனாவின் ஆதிக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­த­ுவ­தற்கு பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் என்ற போர்­வையில் அமெ­ரிக்­கா­வுக்கு கத­வுகளைத் திறந்து கொடுக்­கின்ற வேலைதான் இது என்ற கருத்து மேலோங்கி வரு­கின்­றது.

ஆனால் எம்மைப் பொறுத்­த­வரை அந்த வாதங்­களை முற்­றாக எதிர்க்க முடி­யா­விட்­டாலும் உலக ரீதியில் இஸ்­லாத்தைக் கொச்­சைப்­ப­டுத்­து­வதும் கிறிஸ்­தவ – முஸ்லிம் உறவில் பெரும் இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்­து­வதும் முஸ்­லிம்­களின் இருப்பை உலக ரீதியில் கேள்­விக்­கு­றி­யாக்­கு­வதும் இவர்­களின் பிர­தான நிகழ்ச்சி நிரலில் அடங்­கு­கின்­றது என்­பது எமது வாதம்.

நமது சமயத் தலை­மைகள் ISIS பயங்­க­ர­வா­தி­களின் ஊடு­ரு­வலை எவ்­வ­ளவு தூரம் தெரிந்து வைத்­தி­ருந்­தார்கள் என்று தெரி­யாது. அவர்கள் தமது சொல்லைக் கேட்­காது முரண்­டு­பி­டிக்­கின்ற ஒரு அமைப்­பா­கத்தான் பொது­வாக ஒட்­டு­மொத்த தவ்ஹீத் அமைப்­புக்­க­ளையும் நோக்­கி­னார்கள் என்­பது எமது கருத்து.

சர்­வ­தேசப் பயங்­க­ர­வா­திகள் தேசிய தவ்ஹீத் அமைப்பு ஊடாக இந்த நாட்டில் கால்­ப­தித்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தனை ஒரு போதும் நமது மதத் தலை­வர்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை. அவர்கள் தவ்ஹீத் அமைப்­புக்­களை முரண்டு பிடிப்­ப­வர்­க­ளாக மட்­டுமே பார்த்து வந்­தி­ருக்­கின்­றார்கள்.

இவர்கள் பற்றித் தெரிந்­தி­ருந்தால் இந்த நாட்டு முஸ்­லிம்­களை இவர்கள் தமது ஜும்ஆ பிர­சங்­கங்­க­ளின்­போது எப்­போ­தா­வது விமர்­சித்­தி­ருக்­கின்­றார்­களா?.
ISIS ஒரு கொலை­கார இயக்கம் என்று எந்த ஜும்ஆ பேரு­ரை­க­ளி­லா­வது சொல்­லப்­பட்­டி­ருந்­தது என்று கேட்கத் தோன்­று­கின்­றது. எனவே எல்லா இடங்­க­ளிலும் அரசு, பாது­காப்புத் தரப்பு உட்­பட நிறை­யவே தவ­று­களும், ஓட்­டை­களும் விடப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே இதன்­பி­ற­கா­வது இந்தக் கொலை­கா­ரர்­களைப் புரிந்து கொள்­ளுங்கள்.

நமது தலை­மைகள் குறித்து கர்­தினால் மெல்கம் ரஞ்சித் இப்­படி ஒரு கருத்தைக் கூறி இருந்தார். முஸ்லிம் தலை­மைகள் மத்­தியில் ஒற்­று­மை­யில்லை என்­பது அவ­ரது கருத்­தாக இருந்­தது.

முஸ்லிம் சமூ­கத்தில் என்ன நடக்­கின்­றது என்­ப­தனை முஸ்லிம் அர­சியல் மற்றும் சமூ­கத்­த­லை­மை­க­ளுக்கு போதிய தெளிவு இல்­லா­விட்­டாலும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச இஸ்­லா­மிய சமூ­கத்தில் என்ன நடக்­கின்­றது என்­ப­தனை அவர் நன்­றாக அறிந்து வைத்­தி­ருக்­கின்றார் என்­பது எனது கணிப்பு. பேராயர் முஸ்லிம் தலை­மைகள் பற்றிச் சொன்­ன­தைத்தான் நாமும் எப்­போ­துமே சொல்லி வரு­கின்றோம்.

இதற்கு நல்­ல­தொரு உதா­ர­ணத்தை ஈஸ்டர் தாக்­கு­தலின் பின் எம்மால் பார்க்க முடிந்­தது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் இமாம் இந்த நெருக்­க­டி­யான ஜும்­ஆவை தவிர்த்து முஸ்­லிம்கள் வீடு­க­ளிலே லுஹர் தொழு­கையை மேற்­கொள்­ளுங்கள் என்று வானொ­லியில் முஸ்­லிம்­களை அறி­வு­றுத்திக் கொண்­டி­ருந்தார். அதே நேரம் இஸ்­லா­மிய கலாசார அமைச்சர் ஹலீமும் இதே நிலைப்­பாட்டில் பேசினார்.

ஆனால், முஸ்­லிம்கள் இப்­படி எல்லாம் கோழை­க­ளாக வாழ முடி­யாது. ஜும்ஆ தொழு­கையை பள்­ளி­வா­சல்­களில் நடாத்­துங்கள் என்று ஊட­கங்­களில் சொல்லி இருந்தார் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.

ஜும்­ஆவை 20 நிமி­டங்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள் என்று வேறு சொல்­லப்­பட்­டது. ஆனால் பொறுப்பு வாய்ந்­த­வர்கள் கொழும்பு கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் வழக்­கம்போல் ஜும்ஆ பிர­சங்­கத்தை நேர­டி­யாகப் பணம் கொடுத்து வானொ­லியில் ஒலி­ப­ரப்பிக் கொண்­டி­ருந்­த­துடன், தாக்­கு­தலை ஜே.வி.பி. கிளர்ச்­சி­யு­டனும் புலி­களின் போராட்­டத்­து­டனும் ஒப்­பிட்டு தனது பிரசா­ரத்தில் அவ­ரு­டைய அறிவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
எனவே, இந்த நெருக்­க­டி­யான நேரத்­தில்­கூட ஒரு பொதுத் தீர்­மா­னத்­திற்கு இவர்­க­ளினால் வர­மு­டி­ய­விலை என்­பது ஈகோ பிரச்­சினை. நாங்­கள்தான் பெரி­ய­வர்கள், பொறுப்­பா­ன­வர்கள் எங்­களை கேட்­காமல் எப்­படி முடிவு எடுக்க முடியும் என்ற கதைதான் இது.

அத்­துடன் கிறிஸ்­த­வர்கள் கேட்டுக் கொண்­ட­தற்­கா­கத்தான் இந்த ஜும்ஆ பிர­சங்­கமும் தொழு­கையும் என்று வேறு விளக்கம் சொல்­லப்­பட்­டது. நாம் சொல்­கின்ற இந்த கதையின் உண்மைத் தன்­மையை கடந்த வெள்ளி நேரடி வானெலி ஒலி­ப­ரப்பை எவர் வேண்­டு­மா­னாலும் விலை­கொ­டுத்து வாங்கிக் கேட்க முடியும். இந்த முரண்­பாட்­டுக்குக் காரணம் நல்ல வழி­காட்­ட­லின்­மையும் அறிவு சார்­பற்ற விட­யமும் என்­றுதான் சொல்ல வேண்டும்.

இன்று ஒட்­டு­மொத்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் குற்­ற­வா­ளி­க­ளாக படம் பிடித்து காட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சமூ­கத்தைக் காக்க வேண்­டிய இந்த நேரத்தில் தம்மை எப்­படிக் காத்துக் கொள்­வது என்­றுதான் அவர்கள் இன்று பார்க்­கின்ற நிலை நாட்டில் காணப்­ப­டு­கின்­றது.
நிலைமை எந்­த­ள­வுக்குக் கொடூ­ர­மா­கப்போய் இருக்­கின்­றது என்றால் அரபு எழுத்­துக்கள், புத்­த­கங்கள், சமயப் பிர­சு­ரங்கள் பயங்­க­ர­வாதப் பிர­சு­ரங்­க­ளாகப் பார்க்­கப்­ப­ட்­டி­ருக்­கின்­றன.

வீடு­களில் அன்­றாடத் தேவை­க­ளுக்­கான கத்தி, பொல்லு போன்ற உப­க­ர­ணங்­க­ளை­கூட முஸ்­லிம்கள் இன்று குழி­தோண்டிப் புதைக்­கின்ற நிலை தோன்றி இருக்­கின்­றது. இந்த அனைத்துக் கொடு­மை­க­ளுக்கும் பதில் சொல்­வது யார்? எனவே முஸ்­லிம்­களே இந்த ISIS நமது நாட்டின் இயல்பு நிலை­யையும் முஸ்­லிம்­களின் இருப்­பையும் கலா­சா­ரத்­தையும் குழி­தோண்டிப் புதைக்­கின்ற காரி­யத்­தைதான் சர்­வ­தேச மட்­டங்­களில் செய்­கின்­றார்கள் என்­ப­தனை உணர்ந்து கொள்­ளுங்கள்.

எனவே, தனது குடும்ப உறுப்­பினர் ஒவ்­வொ­ருவர் மீதும் ஏனையோர் எச்­ச­ரி­க்கை­யாக இருங்கள். பெற்­றோர்கள் பிள்­ளை­களை நம்ப முடி­யாது. பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோரை நம்ப முடி­யாது என்­ப­தனைப் புரிந்து செயற்­ப­டுங்கள்.
தேசிய மட்டம், பிராந்­திய மட்டம், கிரா­மிய மட்டம், மஹல்லா மட்டம், சர்­வ­தேச மட்டம், இஸ்­லா­மிய நாடுகள், இஸ்­லா­மியர் சிறு­பான்­மை­யாக வாழ்­கின்ற நாடுகள், செல்­வந்­த­நா­டுகள் போன்­ற­வற்­றிலும் இவர்கள் புதிய யுக்­தி­க­ளு­டனும் புதிய நியா­யங்­க­ளு­டனும் தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள நிறை­யவே வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன.

செல்­வாக்­கான மத்­தி­ய­கி­ழக்கு நாடுகள், மலே­சியா போன்ற நாடு­களில் இவர்கள் தமது கைவ­ரி­சையைக் காட்டி அந்த நாடு­களை பொரு­ளா­தா­ர ரீதியில் சீர்­கு­லைக்க வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறான தாக்குதல்களுக்கு மனித குண்டுகள் மட்டுமல்ல ஊடகங்கள் மூலமாகவும் தமது இலக்கிற்காக இவர்கள் பயன்படுத்துகின்றார்கள். இப்போதும் அது நடந்து கொண்டுதான் வருகின்றது.

எமது அவதானப்படி அரசு மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடக்கின்றது, அதன் கட்டமைப்புக்கள் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை விபரமாக தெளிவு படுத்த வேண்டி தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

பொதுவாக நோக்குகின்றபோது இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள், – சோதனைகள் ஒரு கட்டுக்கோப்புக்குள்தான் போய்க் கொண்டிருக்கின்றன. அவர்கள் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைதான் இன்று நாட்டில் இருக்கின்றது.

இந்த காட்டுமிராண்டிகளை இந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதால் மட்டுமே இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் மீண்டும் தலைநிமிர முடியும். இருந்தாலும் வடுக்கள் இருக்கத்தான் செய்யும். போதை வியாபாரத்தின் பின்னால் பண ஆசை இருப்பது போல் இதன் பின்னாலும் இஸ்லாமிய விரோதிகளின் பணம் நிறையவே மூலதனமிடப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்தான் இவர்களிடம் இருக்கின்ற பணக் குவியல்.

நஜீப் பின் கபூர்


4 comments:

  1. காத்தான்குடிப்பிரதேச
    ம் பொருளாதாரம் அர
    சியல் ஏனைய துறை
    சார் அபிவிருத்தியை
    அடைந்து நிற்கும் நேர
    த்தில் அறிவுசார் கொ
    ள்கைகளுக்கு அப்பால்
    பல பிரிவுகளை பிரதே
    சத்தில் வளரவிட்டிருப்ப
    கண்டுகொள்வதில்லை.
    துறைசார் வேலைப்பழு
    வினால் குறித்த பிரிவு
    கள் சமூக கண்கானிப்
    பிலிருந்து விடுபடுகிறது.
    இப்போக்கின் ஒரு விளை
    வைத்தான் அப்பிரதேசம்
    இன்று எதிர்கொள்ள
    வேண்டியேற்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. மிக முக்கியமான விவாதத்தின் ஆரம்பம். 1980 களில் வாகாபிச பரம்பலோடு ஆரம்பீத்து 2001 அல்கைடா ஒசாமா பின்லாடன் என வளர்ந்து இன்று ஐஎஸ் எஸ் வரை பற்றிக்கொள்கிற அளவுக்கு நோய்வாய்ப்பட்ட சமூக கலாசார அரசியல் சூழல் இலங்கையில் குறிப்பாக கிழக்கில் தொடற்சியாக நிலவியுள்ளதை மறந்துவிட்டு சகறானுடன் ஆரம்பித்து இந் நோயையும் அதற்கான மருந்தையும் சரியாக கண்டுகொள்ளமுடியாது.

    ReplyDelete
  3. நிச்சயமாக ஜெயபாலன் அவர்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையே.
    இதற்கான தீர்வு CIAன் உருவாக்கம்,CIA ன் வேலைகள்,தீவிரவாதத்திற்கு வித்திட்டவர், தாலிபங்களை,பின்லெடனை உருவாக்கியவர் முதல் isis ஐ உருவாக்கியவர் முதற்கொண்டு ஆராயப்பட வேண்டியதாகும் என்பதை விமல் வீரவம்ச அமைச்சர் கூட இன்றய ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

    ReplyDelete
  4. ��ஆரம்பத்தில் சமூகத்தை பிரித்தவர்களே இந்தக்கட்டுரையை எழுதியிருப்பது நகச்சுவையாக இருக்கிறது������ acju a குறைசொல்வதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. ntj எல்லா tj உம் ஒரு குப்பைத்தொட்டியின் வெவ்வேறு குப்பைகள்தான். isis இற்கு பின்னால எப்படி zionism இருக்கிரதோ. wahabism இற்கு பின்னாடியும் ஒரு பெரிய history இருக்கு அதை முதல் தேடவும். சுருக்கமா சொல்ரண்டா உங்கட கதையெல்லாம் அள்ளிக்கிட்டு பளயங்.

    ReplyDelete

Powered by Blogger.