Header Ads



ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு உதவியதாக கூறும் 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான பேச்சுக்கள் நடந்து முடிந்திருப்பதாகவும் எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் இந்த யோசனைக்கு ஏலவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே வி பி ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் சொல்லப்பட்டுள்ளது,.

4 comments:

  1. இது கடந்த ஆட்சியில் அரசியல் நாகரீகத்துடனும் ராஜதந்திர அறிவுடனும் நடந்து கொள்ளாததுடன் சிறுபிள்ளைத்தனமான தம் இனத்தை உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களைப் பேசுவதினதும் விளைவு. சந்தர்ப்பம் பார்த்து பழி வாங்க முயற்சிக்கின்றனர்.

    ReplyDelete
  2. துவேஷக்கார நாய்களின் தீவிரவாத சதி வேலை தான் இது அமைச்சர் ரிஷர்டுக்கு எதிராக செயல்படுகின்றார்கள்.

    ReplyDelete
  3. அப்படியொன்று நடந்தால் ரிஷாட் தன்னுடைய 6 உறுப்பினர்களோடு அரசைவிட்டு வெளியேற வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மற்ற அணைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் வெளியேற வேண்டும். முக்கியமாக ஹரீஸ் mp ஒரு சிறந்த முடிவெடுப்பார் என நம்புகின்றோம்

    ReplyDelete

Powered by Blogger.