Header Ads



சம்மாந்துறையில் அமெரிக்க, தயாரிப்பு ஆயுதங்கள் மீட்பு

- பாறுக் ஷிஹான் -

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் சற்றுமுன் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் இராணுவ தேடுதலில் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமான காணியில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

இதன் போது எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி ரவைள் 8, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள் ,ஜெலக்னைட் குச்சிகள் 200 ,வயர் தொகுதி 23 ,அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ கிராம் 4 ,இராணுவ மேலங்கி 1, வாள் 1 ,கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. நம் இலங்கைக்குவரும் அமெரிக்க கப்பல்களையும்,அவர்களின் ஜெட் விமானங்களையும்,அதில் வந்திறங்கும் பிரமுகர்களையும் இலங்கை பாதுகாப்பு அமைப்பால் சோதனைக்கு உட்படுத்தகூடாது என்ற ஒப்பந்த்தை மீள்பார்வை செய்து ரத்து செய்யவும் இல்லாவிட்டால் நம் நாட்டில் மீண்டும் தீவிரவாத பயங்கர வாதத்தை உண்டுபன் அவர்களின் தூதரகத்தினூடகவே ஆயிதங்களை இரகசியமாக வினியோகிப்பார்கள் செய்வதை செய்துவிடு ISIS பேரில் சேர்துவிடுவார்கள்

    ReplyDelete
  2. No difference. World known truth is ISIS are controlled by USA.( US will send ISIS anywhere they want)
    If you can not beleave me ask the President of Russia and youtube.

    ReplyDelete

Powered by Blogger.