Header Ads



முஸ்லிம்கள் பெருமளவிலான, ஆயுதங்களை வைத்திருந்தமை பாரதூரமானது - வாசுதேவ

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பாக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், பாதுகாப்புசார்  நடவடிக்கைகள் அனைத்தும்   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  வழிநடத்தில்  பிரகாரமே இடம் பெற்றுள்ளது. 

பொலிஸ்மா அதிபர்  பூஜித  ஜயசுந்தர  ஐக்கிய தேசிய கட்சியின்   விருப்பத்திற்கமைய  செயற்பட்டுள்ளார்.முஸ்லிம் மக்கள் பெருமளவிலான ஆயுதங்களை  வைத்திருந்தமையின் நோக்கம்  பாரதூரமானது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ  நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு  மாகாணம் உட்பட  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  உள்ள முஸ்லிம் மக்களிடம் இருந்து   பெருமளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மாதம்  21ம் திகதி  தற்கொலை குண்டுத்தாரிகளினால் நடத்தப்பட்ட பின்னணியினை சாதாரண  மக்களும்  அறிந்திருக்க வேண்டும்.  

தாக்குதலை  தொடர்ந்  முஸ்லிம்-சிங்கள  இனத்தவரிடையில்   இனகலவரம் ஏற்படும் என்பது  முன் கூட்டியே     யூகிக்கப்பட்டுள்ளது.பலர்  தமது  பாதுகாப்பினையும்,  தாக்குதலை தீவிரப்படுத்தவுமே இவ்வாறான ஆயுதங்களை  தம்வசம் வைத்துள்ளார்கள்.

முறையான  திட்டமிடலுக்கு அமையவே  கடந்த மாதம்  குண்டு   தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.இனகலவரம்   ஏற்படுவற்கான  சூழ்நிலைகள்  முறையான  வழிநடத்தலுக்கு அமைய   தவிர்க்கப்பட்டுள்ளன.

அடிப்படைவாதிகளின் நோக்கம்  எமது  நாட்டை பொறுத்தவரையில் வரையறுக்கப்படவில்லை.பல்பேறு  பிரிவிலும் இவர்கள் தாக்குதல்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர் . 

அரச   தலைவர்களையும்  கொலை செய்வதற்கான திட்டமிடல்களும் வகுக்கப்பட்டுள்ளன.இதன் பின்னணியில் அரசியல் நோக்கங்களும்  காணப்படும். பாராளுமன்ற  சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்லவின்  தரப்பினர்   ஜனாதிபதிக்கு  அவமதிப்பினை ஏற்படுத்தும் விதமாக   கடிதங்களை  பறிமாற்றியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை  இதுரையில் அரசாங்க தரப்பு இதுவரையில் குறிப்பிடவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
(இராஜதுரை ஹஷான்)

6 comments:

  1. Kattiyum WAALUM MATTUM THAAN .

    ITHU NAMMA NAATULA ELLAR IDUTTHULAIYUM IRUKKUTHU.
    AANAL UNGADA WIITULA ITHA WIDA PAYANGARA AAYUTHAM IRIKKU.

    ReplyDelete
  2. ஜயா நீங்கள் முஸ்லிம் அப்பாவி மக்களை தவராக புரிந்துள்ளீர்கள் கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிடம் இருக்கும் ஆயுதங்களையெல்லாம் கையலிக்க வேண்டும் என்று அரிக்கை பிரப்பித்த போது அனைத்து மக்களும் தங்களிடம் இருந்த ஆயுதங்களையெல்லாம் கையலித்த பிறகு அவரவர்களுடைய தற்பாதுகாப்புக்காகவேண்டி வால் என்ற அந்த ஆயுதத்தை வைத்திருக்குன்றார்கள் ஆகவே கைது செய்யப்பட்டிருக்கும் மக்கள் வால்கள் வைத்திருந்த காரணத்தினால் தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் அப்படி என்றால் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தீவிர வாதிகள் என்றுதான் சொல்ல வேண்டும் காரணம் அனைத்து மக்களிடமும் இவ்வாறான ஆயுதங்கள் இருக்குன்றது எல்லோரிடமும் இறுந்து அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்ற வேண்டும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா என்ன ஜயா நியாயம் .....

    ReplyDelete

  3. Hon. Vasudeva Nanayakkara; Greetings Sir. Sorry to say this comment whether you have chance to read it. You are an elected member of parliament by the people and for the people. In your box of votes, you might have some Muslim votes too. Your language in this column, you are totally blaming all Muslim citizens of the country as if they are the cause for this incident. Since you are a politician, it does not mean that you can speak anything that you want about an innocent community. Security forces say a few Muslims involved; whereas you say all the Muslim community participated in this incident. Before you comment things; you should not forget you are a Politician of all communities. Can you point out the number of Muslims who get caught for having dangerous weapons? Politicians as well and the media have more powers than the Security forces to safeguard the country. These two elements are good enough to make collapse and the peace.

    ReplyDelete
  4. புல் வெட்டுவதற்கு தான் பள்ளிவாசல்களில் வாள் போன்ற பல ஆயுதங்களை வைத்திருந்ததாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பிரஸ் மீற்கிங் வைத்து அறிவித்தாரே

    ReplyDelete
  5. 5, 6 panthiyil kurippitullathai paarkum pothu ithu thodarfana sahala vidayankalum already Hon.Wasukku therinthirukku. So, ivarukkum ithil thodarfu irukku enpathu confirma theriyuthu allawa.

    ReplyDelete

Powered by Blogger.