Header Ads



ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக ஹிஸ்புல்லா, தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் - யோகேஸ்வரன்

ஊயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்பிரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாதத்தாக்குதல் தமிழ் மக்களை மையமாகவே வைத்தே தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராகச் சொல்லப்படும் சூத்திரதாரி சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தத் தாக்குதலால் நாட்டில் இருக்கின்ற அனைரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முப்படுத்தப்பட்ட நிதியில் துறைநீலாவணைக் கிராமத்தில் 45 இலட்சம் நிதியில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிறிஸ்தவ வழிபாடானது தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் கொழும்பில் நடாத்தப்படுவது வழமை இதில் தமிழ் மொழியில் வழிபாடு நடாத்தப்படுகின்ற போதுதான் தாக்குதல் நடாத்தப்பட்டு இருக்கின்றது.

அதிலும் முக்கிய பங்கு எமது மாவட்டத்தில் இருக்கின்றது ஐ.எஸ் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தௌஹீத் ஜமாத் அமைப்பை வைத்துக்கொண்டு காத்தான்குடியில் இருந்து சஹ்றான் என்பவர் எமது சமூகத்திற்குபாரிய அச்சுறுத்தலாக இருந்துள்ளார்.

இவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது குறிப்பாக தௌஹீத் ஜமாத் அமைப்பை 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அமைப்பு ஏனைய சமூகத்திற்கம் ஏனைய சமயங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் அத்தோடு இஸ்லாத்துக்குள்ளும் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக 2017.3.13ஆம் திகதி தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் சஹ்றானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

அதாவது இவர் தீவிரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகக் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளை காத்தன்குடி பொலிஸ் மற்றும் காத்தன்குடிப் பிரதேசசெயலாளரிடமும் மகஜர் கையளித்து இருப்பதாகவும் உயர் மட்டத்தில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மகஜர் அனுப்பியதாக செய்திகளில் அறிகின்றோம்.

நாட்டினுடைய தலைவர்கள் யாரும் இத்தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பாக தங்களுக்குத் தெரியாது எனக் கூறமுடியாது இவர்கள் கரிசனை காட்டியிருந்தால் இவ்வாறான தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் .

ஆனால் இத்தீவிரவாதி வசித்த இடத்தில் ஒரு அமைச்சர் இருந்திருக்கின்றார். அவர் தோற்றாலும், அமைச்சர் வென்றாலும் அமைச்சர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ ஆதரித்து மைத்திரிபாலசிறிசேன எதிராக செயற்பட்டவர் இவரை ஜனாதிபதி தனக்கு ஆதரவு குறைவாக இருந்தமையால் அவருக்குத் தேசியப்பட்டியல் வழங்கி இராஜாங்க அமைச்சராகவும் நியமித்து இன்று ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

இவரது ஊரான காத்தான்குடியில் இந்த தீவிரவாதி சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாத் அமைப்பும் இருந்துள்ளது. இவர்களது நடவடிக்கை தொடர்பாக ஏன் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுபோயிருக்க முடியாமல் போனது. அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பாரானால் இந்தப் பாரிய அழிவைத் தடுத்திருக்க முடிந்திருக்கும்.

இன்று மாவட்டத்தில் என்ன நடக்கிறது? கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருக்கட்டும் சாதாரண பொதுமக்களாக இருக்கட்டும் யாருடைய வீட்டுக்கும் செல்லமுடியாத அளவிற்பு தமிழர்கள் மத்தியில் பாரிய சோதனைகளும் பாதுகாப்புக் கெடுபிடிகளுமாகவே இருந்தது. எங்கள் பின்னால் புலனாய்வுப்பிரினர்கள் பின்தொடர்வார்கள்.

அண்மையில் வவுணதீவில் பொலிஸாரைச்சுட்டது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனக் கூறி அப்பாவிகளைக் கைதுசெய்து அடைத்தார்கள்.

ஆனால் என்ன நடந்தது. குண்டு வெடிப்பின் பின்னர் தீவிர விசாரணையின் பின்னர் அவர்களை சுட்டவர் சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் காத்தான்குடியில் இருந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது.

அதுமட்டுமா எங்களது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டார். இவ்வாறு அப்பாவிகளை விசாரித்ததும் அப்பாவிகளை கூட்டில் அடைத்தும் இருக்கின்றார்கள் புலனாய்வுப்பிரிவினர்.

2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புணாணை ரெஜிதென்னயில் ஆரம்பிப்பதனை நானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தோம். அவ்விடத்தில் பல்கலைக்கழகம் வேண்டாம் என தெரிவித்தோம்.

ஆனால் அக்காணியை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தான் ஒழுங்கு செய்து பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்.

இக்காணி மலையகத்தில் இருந்து 1959, 1979 ஆண்டு மட்டக்களப்பு மயிலந்தனைக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட 42 குடும்பங்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்டது.

அவர்களிடம் இருந்தே இக்காணி இப்பல்கலைக்கழகத்திற்குப் பறித்தெடுக்கப்பட்டு இஸ்லாமிய முறையில் பெரியதோர் பல்கலைக்கழகம் கட்டப்பட்டு இருக்கின்றது.

இதனை அரசாங்கம் பொறுப்பெடுத்து இஸ்லாமிய முறையில் இருந்து மாற்றப்பட வேண்டும். அது அனைத்து இன மக்களுக்கும் சொந்தமாக இருப்பதுடன் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலோ அவரது மகனது தலைமையிலோ அல்லது அவரது குழுவின் தலைமையிலோ இயங்கக் கூடாது.

தீவிரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி காத்தான்குடியில் இருந்தவரின் நடவடிக்கையினை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாது மறைத்த கிழக்கு மாகாண ஆளுநரை ஜனாதிபதி விசாரிக்கவும் கைதுசெய்யவும் போவதில்லை.

ஏன் என்றால் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றார். அவரை விசாரித்தால் பலரது உண்மை வெளியேவரும். அன்று தமிழர்கள் அல்லல் பட்டபோது அதனைப்பார்த்து சிரித்தார்கள். நாங்கள் அவ்வாறு இல்லை. அப்பாவி முஸ்லிம் மக்களைத் துன்புறுத்தக் கூடாது. உண்மையான தீவிரவாதிகளும் அவர்களுக்கு உதவியவர்களையும் கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும்.

எல்லைக்கிராமத்து மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். முஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற ஆயுதங்கள் சட்டவிரோதமான பொருட்கள் தமிழ் பிரதேசங்களில் வீசப்படுகிறது. இதனால் எல்லையில் இருக்கும் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எல்லைப் பிரதேசங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும்.

தமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை. தமிழ் மக்களை நன்றாக நோவடித்து இருக்கின்றீர்கள். இன்று ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மகிழ்ச்சியை குழப்பி துன்புறுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


4 comments:

  1. பிரபாகரனின் செல்லப் பிள்ளைகளாக நீங்கள் ஒரு காலத்தில் இருந்தீர்கல்.இப்போது அவர் ஜனாதிபதியின் செல்லப்பில்லையாக இருப்பதில் என்ன தவறு

    ReplyDelete
  2. முஸ்லிம்களை விமர்சிக்காமல் இந்து மாங்காய்களுக்கு பேசவே தெறியாது.தயவுசெய்து இப்படியான மனநலம் பாதிக்கபட்டவர்களின் பேச்சுக்களை பிரசுரிக்கவேண்டாம்.

    ReplyDelete
  3. இவ்வளவு கதைக்கும் நீர் உண்மையான ஆவணங்களுடன் நீதிமன்றை நாடலாம்.or உங்களது பாராளுமன்ற பலத்தை பாவிக்கலாம்.வெறும் ஒருவரால் இந்தளவு பலம் இருக்கிறது என்றால் உங்கள் கூட்டத்தின் பலம் எங்கே? வீண் வயிற்றெரிச்சலை கொட்டாதீர் பெரியாரே!உங்கள் மொழியை பேசும் இனத்தை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. Rizard க்கு அப்பிடி எல்லாம் எழுத தெரியுதே. good அப்பா good.

    ReplyDelete

Powered by Blogger.