Header Ads



பௌசியின் வீட்டில் முஸ்லிம், அரசியல்வாதிகள் அவசரமாக ஒன்றுகூடினர்


- AAM. Anzir -

மூத்த முஸ்லிம் அரசியல்வாதியான பௌசியின் வீட்டில், இன்று வெள்ளிக்கிழமை (17) முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுகூடி, தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக பள்ளிவாசல்கள் சோதனையிடப்படல், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், குருநாகல் முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறை மற்றும் மத்ரசா கல்விமுறைக்கு எதிரான நகர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

மேற்சொன்ன இந்த விவகாரங்கள் குறித்து, உடனடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்திப்பதெனவும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.