Header Ads



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் குண்டு, வெடிக்கவுள்ளதாக அச்சுறுத்திய மாணவன் கைது


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்குள்ளும்,  பல்கலைக்கழக வளாகத்திலும் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு தொலைபேசியில் மிரட்டல் மாணவனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்க​லைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள உபவேந்தரின் அலைபேசிக்கு இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டமைத் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கமைய சந்தேகநபரான மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.