Header Ads



மீண்டும் ஆட்சியில் அமருகிறான் மோடி - ரணிலும் வாழ்த்து

இந்தியா முழுவதும், இன்று (23) ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சிய தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்தச் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கருத்துக்கணிப்பு பொய்யானது, நாங்களே ஜெயிப்போம் என மார்தட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் பின்னடவைச் சந்தித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து, இம்மாதம் 19ஆம் திகதி வரை, ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. மக்களவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளில், பா.ஜ. கூட்டணி 325க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, பீகார், புதுடில்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில், பாரதிய ஜனதாக் கூட்டணியே பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரசைப் பொறுத்தவரை,  பஞ்சாப், கேரளா, தமிழகத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி தர்மபுரியிலும் தேனியிலும் மட்டும் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில், தி.மு.க கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் பெரும் தோல்வியே கிட்டியுள்ளது.

22 தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.கவும் தி.மு.க.வும் சரி சமமாக வெற்றியை பெற்று வருகிறது. இதனால், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு பெரும் ஆபத்து இல்லை என்றே தெரிகிறது.

4 comments:

  1. ஜப்னா முஸ்லீம் - இந்த செய்திக்கு நீங்கள் இட்ட தலைப்பு ஒரு நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையில் உள்ளது. தயவு செய்து திருத்திக் கொள்ளவும்

    ReplyDelete
  2. அவ்வளவும் மோசடியால் வென்ற வாக்குகள், இதனால் இந்த கயவனுக்கு எப்படி கவுரவமாக தலைப்பு விடுவது?

    ReplyDelete
  3. யாரையும் எதிர்பது விமர்சிபது ஆதரிப்பது நிராகரிப்பது என்பவை ஜனநாயக உரிமை. இழிவு படுத்துவது நாகரீகமோ ஊடக தர்மமோ இல்லை. மேலும் கிறிமினல் குற்றமுமாகும். வியாழேந்திரன் கோடீஸ்வரன் மனோ கணேசனைப்போல தமிழர் தலைவர்களை இழிவாக எழுதுகிற பழக்கக தோசத்தில் இப்படி எழுதியிருக்கக்கூடும். எனினும் தவிர்பது ஊடக நாகரீகமாகும்

    ReplyDelete
  4. காட்டு மிராண்டிகளிடம் பண்பை எதிர்பார்க்க முடியுமா ? இவர்கள் எல்லாம் தமிழை படித்து அதில் ஒரு பத்திரிகை வேறு !. வாழ்க மோடி !

    ReplyDelete

Powered by Blogger.