நுவரெலியாவில் சந்தேக நபரொருவரின் நடமாட்டம் - பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது
நுவரெலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடம், பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள விகாரை, பிரதான தபால் நிலையம், புனித சேவியர் தேவாலாயம் மற்றும் நகர பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியாவில், இன்று காலை முதல், சந்தேக நபரொருவரின் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து, அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என, நுவரெலியா பொலிஸ் நிலைய புலன் விசாரணைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆர். ரமேஸ்
Post a Comment