Header Ads



வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றிய, தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர் கைது

மாத்தளை பிரதேசத்தில் தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக சேவையாற்றிவரும் நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து அடிப்படை வாதத்தை போதிக்கும் வகையிலான 48 இறுவெட்டுகளும் சில சஞ்சிகைகளும் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேக நபர் கைதுசெய்யபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(செ.தேன்மொழி)

No comments

Powered by Blogger.