Header Ads



றிஸ்வி முப்தி மொறோக்கோ சென்றது, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். முப்தி ரிஸ்வி, மொறோக்கோ நாட்டுக்கு சென்றது, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

மொறோக்கோவில் நடைபெறும், அல் துருஸ் ஹசனிய்யா என்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காகவே அந்நாட்டு மன்னரின் அழைப்பின் பேரில், முப்தி ரிஸ்வி அங்கு சென்றுள்ளார்.

3 நாட்கள் அங்கு தங்கியிருந்த அவர், தற்போது இலங்கையிலேயே உள்ளார்.

மொறோக்கோவில் தங்கியிருந்த அந்த 3 நாட்களும், விரிவுரைகள் மற்றும் பயான் நிகழ்வுகளிலும் பங்கேற்று, இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துக்கூறியதாகவும் அறிய வருகிறது.

கடந்த வருடமும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். முப்தி ரிஸ்வி, இதே நிகழ்வில் பங்குகொள்ள மொறோக்கோ சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவதூறு, பொய், வீண்பழி சுமத்துதல், புறம் பேசுதல் உள்ளிட்ட பாவங்களில் இருந்து, யா அல்லாஹ் எங்களை பாதுகாப்பாயாக...!

No comments

Powered by Blogger.